Saturday, April 18, 2026
No menu items!

விவசாயிகள்

பொருளாதார நிலையங்களில் மரக்கறி விலை வீழ்ச்சி – விவசாயிகள் நெருக்கடி!

பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சில மரக்கறி வகைகளின் ஒரு கிலோவின் மொத்த விலை 50 முதல் 70 ரூபாய் வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பொருளாதார நிலையங்களில் ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை இன்னும் குறைந்த விலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகளுக்கு அரசாங்கம் வரி விதித்துள்ள...

14 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ள நெல்லின் விலை!

நாட்டில் நெல்லின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரிசி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார். நெல்லுக்கான விலை 14 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் 2 இலட்சம் கிலோ மெட்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். அவை தற்போது சதோச நிறுவனங்களில் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், உள்ளூர்...

சிறுபோகத்திற்கான உரங்கள் கிடைக்கவில்லை; விவசாயிகள் குற்றச் சாட்டு!

இந்த ஆண்டு சிறுபோகத்திற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரங்கள் இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். சேனாநாயக்க சமுத்திரத்தின் கீழ் பயிர்ச்செய்கை செய்யும் அம்பாறை மற்றும் சமாதானபுரம் விவசாயிகள் இந்த ஆண்டு சிறுபோகத்திற்கான பயிர்செய்கையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் சிறுபோகத்துக்கான நாற்று நடும்...

சட்டவிரோத மண் அகழ்வால் விவசாய நிலங்கள் முற்றுமுழுதாக பாதிப்பு!

யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வால் 15 இற்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய நிலங்கள் முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் நேற்று (6/4/2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி உணவத்து அம்மன் கோயிலை அண்டிய மக்களின் விவசாய நிலங்களில் போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான டிப்பர்களில் மணல் அகழப்பட்டுள்ளது. போர்...

உர மானியங்கள் தொடர்பான திட்டத்தை தயாரிக்காத அரசாங்கம்; தேசிய விவசாயிகள் சங்கம்!

சிறுபோகத்திற்கான உர மானியங்களை வழங்குவதற்கான எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் இன்னும் தயாரிக்கவில்லை என்று தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் தங்கள் சாகுபடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள போதிலும், உர மானியங்களை வழங்குவது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகள் கூட இன்னும் எடுக்கப்படவில்லை என்று அதன் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்கள் விவசாய சேவைகள் ஆணையர்...

காட்டு யானைகளின் அட்டகாசம் – சிறுபோக செய்கைக்கு பெரும் தடை!

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டத்தில் சிறுபோகத்திற்கு தடையாக காணப்படும் காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ளதனால் மாவடிப்பள்ளி, காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், போன்ற பல பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்களில் சிறு போகம் செய்யவதற்குரிய ஆரம்ப வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பொத்துவில் காட்டுப்பகுதியை அண்டிய பகுதிகளில்...

நிரந்தரமாக விவசாய வாய்க்கால்களை புனரமைக்குமாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

மட்டக்களப்பு கண்டியனாறு, அடைச்சகல், ஆகிய குளங்களை  புனரமைக்குமாறும் வருடாவருடம் ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கால்களை புனரமைக்குமாறு அரசாங்கம் மற்றும் விவசாய திணைக்களத்திடம் கோரி விவசாயிகள்  இன்று செவ்வாய்க்கிழமை (18/03/2025) வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச விவசாயிகள் அமைப்புக்கள் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை...

வைரஸ் தாக்கம் காரணமாக அழிவடைந்து வரும் பயிர்ச்செய்கை!

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் பயிரிடப்படும் தக்காளி, ஒரு வகை வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் காரணமாக பயிர்ச்செய்கை முற்றிலும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, வெலிமடை, ஊவாபரணகம, எல்ல, பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை போன்ற பகுதிகளில் இவ்வாறு தக்காளி பயிர்ச்செய்கையானது வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்துக்குப் பல...

விவசாயிகளின் உர மானியத்துக்கான பணத்தில் மோசடி – நாமல் கருணாரத்ன..!

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியத்துக்கான பணத்தை சில விவசாயிகள் பெறவில்லை என்றும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (3/18/2025) பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரட்ண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, அநுராதபுரம்...

நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உர நிதி மானியங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

2025 சிறுபோகத்திற்காக நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உர நிதி மானியங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை கவனத்தில் கொண்டு, 2025 சிறுபோகத்தில் நெல் நிலங்களில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கும், நெல் நிலங்களில் பிற வயல் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கும் பின்வருமாறு உர நிதி மானியங்களை...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img