அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று இடம்பெறுகின்றது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








