நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட தடை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அங்கு போராட்டங்கள் மேற்கொள்ளப்படலாம் எனக் கருதி, குறித்த 5 பேருக்கு எதிராக தடைவிதிக்கக் கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் மனுவொன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடமாகாண தொழில் கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ். சசிகரன் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த 5 பேரையும் இன்றைய தினம் மன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு கோரி நீதிமன்றினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் குறித்த மனுவை நிராகரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here