திருகோணமலை மூதூரில் பேருந்து பாரவூர்தியுடன் மோதியதில் 33 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது மினுவாங்கொடையிலிருந்து சேருவிலவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.








