பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (3/24/2025) தொடக்கம் எதிர்வரும் 27ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிலையில் இன்றைய தினம் பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை தேசிய மக்கள் சக்தி தாக்கல் செய்தது.

கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மன்னார், பூநகரி, தெஹியத்தகண்டி உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here