புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக தற்போது சுமார் 200,000 மக்கள் வரிசையில் காத்திருப்பதாகக் கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.

எனவே, அந்த வரிசையில் மேலதிகமாக இணைவதை மக்கள் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது வரிசையில் உள்ள மக்கள் புனித தந்ததாதுவை பார்வையிடுவதற்கு 2 நாட்கள் செல்லும் எனவும் மக்களின் வரிசை கண்டி நகரிலிருந்து 3 கிலோமீற்றர் தூரத்துக்கு நீண்டுள்ளதாகவும் கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here