வடக்கு மாகாணத்தின், யாழ்ப்பாண மாவட்டத்தில்முக்கிய இடமாக விளங்கிய வட்டுக்கோட்டை திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றதா? என்ற ஆச்சரியத்தையும் கவலையையும் கலாநிதி சிதம்பரமோகன் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது கருத்தில் தொடர்ந்து அவர், சங்கானையை நகர சபையாக உயர்த்த வேண்டும் என்றும், வட்டுக்கோட்டையை பிரதேச சபையாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வட்டுக்கோட்டை திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா? எனும் கேள்வியையும் கலாநிதி சிதம்பரமோகன் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.








