Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யமும் மீனவ பிரதிநிதிகளும் இணைந்து தொடர் பரப்புரை …!

தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு சார்பான பரப்புரை கோப்பாய் தொகுதியில் அதி தீவிரமாக இடம் பெற்று வருகின்றன. சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநரும், சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் தலமையில் இடம்பெற்றுவரும் பரப்புரையில் வட மாகாண மீனவ...

பலாலி விமான நிலையத்தில் வலம்புரியுடன் ஒருவர் கைது..!

சென்னையில் இருந்து பலாலி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒருவர் வலம்புரி சங்கை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றும் மதியம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட...

டில்லியில் கல்லூரி விடுதியில் சென்னை மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

டில்லி தேசிய சட்டப் பல்கலைகழகத்தில் மூன்றாம் ஆண்டு எல்எல்பி படித்து வந்த சென்னையை சேர்ந்த மாணவி அமிர்தவர்ஷினி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அய்யப்பாக்கத்தை சோ்ந்த அமிர்தவர்ஷினி, டில்லி துவாரகாவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைகழகத்தில் மூன்றாம் ஆண்டு எல்எல்பி படித்து வந்தார். பல்கலைக்கழகத்தின்...

இஸ்ரேல் தூதரகம் அருகே பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலி..!

ஜெர்மனியின் முனிச் நகரில் இஸ்ரேல் தூதரகம் செயல்படுகிறது. தூதரகம் அருகில் துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்களுடன் நபரொருவர் சுற்றித் திரிந்துள்ளார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த பொலிஸார் அவரை தடுத்து விசாரணை நடத்த முற்படுகையில் அவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். பொலிஸாரும் அவரை நோக்கி சுட்டதில் சம்பவ இடத்திலேயே அந் நபர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் 18 வயதான இளைஞராவார். 1972ஆம்...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபரை சந்தித்த மனுஷ நாணயக்கார..!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஐந்து வருடங்களாக வெலிகடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அஸ்லம் என்ற நபரும் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவர்கள் சந்தேக நபரை மற்றொரு நபருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விடயம்...

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலை பொதிகளுடன் இருவர் கைது..!

புத்தளம், சிலாபம் கடற்கரை பகுதியில் படகுகள் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலை பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியகுடியிருப்பு மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 43 வயதுடைய இருவரே...

இலங்கை மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு தொடர்ந்து வளரும்; ஜீவன் தொண்டமான்..!

இலங்கை மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு தொடர்ந்து செழித்து வளரும் என்பது எனது இடைவிடா நம்பிக்கை என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் சார்பில் மலேசியாவின் 67வது தேசிய தின நிகழ்வு  கொழும்பு ஒன் கோல்பேஸ் விருந்தகத்தில் நடைபெற்றது. இந்த...

இரத்மலானை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது..!

கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட 03 சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22, 38 மற்றும் 55 வயதுடைய இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கைது...

இன்றைய நாளுக்கான வானிலை….

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100...

சஜித்திற்கு ஆதரவளிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...
- Advertisement -spot_img