Monday, August 24, 2026
No menu items!

Tamil Vani

கெக்கிராவ பகுதியில் ஏற்பட்ட மோதல் – ஒருவர் கொலை

கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23) அதிகாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 56 வயதுடைய கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் வீட்டில் நடைபெற்ற விருந்தின் போது அயல் வீட்டில் இருந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறு பெரிதாகியுள்ளது என தெரியவந்துள்ளது. இதன்போது அயல் வீட்டில்...

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் ரூபாய் 10 மில்லியனை ஒதுக்கியுள்ளது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 42வது தேசிய மீலாத்-உன்-நபி கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமய நிறுவனங்களை வலுப்படுத்துவதும் இணக்கமான வாழ்வை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...

வங்காள விரிகுடாவில் 24 பணியாளர்களுடன் சரக்கு கப்பல் மூழ்கியது

பனாமா கொடி பறக்கும் சரக்கு கப்பல் ஒன்று 24 பணியாளர்களுடன் வங்காள விரிகுடாவில் மூழ்கியுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலம் பரதீப் கடற்கரையில் இருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் நேற்று `MV ஓசியன் வின்னர் Ocean Winner` 'கப்பல் மூழ்கியது'. கப்பலுடனான தொடர்பு...

சட்ட வரைவில் ஏஐ தொழிநுட்பதை பயன்படுத்த திட்டம்

சட்ட வரைவு செயல்முறையில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிலரங்கை இலங்கை நடத்தியுள்ளது. மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் (VASPs) தொடர்பான சட்டத்தை வரைவதில் இந்த தொழில்நுட்பத்தை பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. “சிறந்த சட்டங்களுக்கான சிறந்த கருவிகள்” என்ற தொனிப்பொருளில் ஒகஸ்ட் 21 அன்று சட்ட வரைவாளர் திணைக்களத்தில் இந்த பயிலரங்கு...

 சுகீஷ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, காலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்ததன் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விளக்கமறியலில் உள்ள பண்டார, அவரது உடல்நிலை காரணமாக நேற்று (21) சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு அரச நிறுவனங்களிடமிருந்து ஊதியம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான...

எல்நினோ காரணமாக 81,865 பேர் பாதிப்பு – 7 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம்

எல்நினோ நிலைமையின் காரணமாக ஏற்பட்டுள்ள வறண்ட காலநிலையால் இதுவரை 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25,628 குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 23 பிரதேச செயலக பிரிவுகள் இந்த எல் நினோ நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பாதிக்கப்பட்ட 72,153 பேருக்கு தற்போது...

கலைஞர் கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக் கிரியைகள் இன்று 

முன்னணி இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியைகள் இன்று (22) பொரல்லை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நாவல, விஜயப்பாகு மாவத்தையில் உள்ள நந்தா மாலினி இசை ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் தொடர்பான மேலதிக விவரங்களை பேராசிரியர் சுனில் ஆரியரத்ன வெளியிட்டுள்ளார். இதற்கமைய"காலை 10 மணிக்கு...

விசாரணைகளை அடுத்து வெல்லம்பிட்டியில் சட்டவிரோத துப்பாக்கி மீட்பு

தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பில் உள்ள திமுது சதுரங்க என்ற 'சமிட்புர சதூ' என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியிடம் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நேற்று (21) வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத வீடொன்றில் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில்...

 சீனர்கள் மூவர் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்

கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த 3 சீன நாட்டவர்களை தாக்கி, அவர்களில் ஒரு சீனரை கடத்தி சென்று கொலை செய்த குற்றம் தொடர்பில் தேடப்படும் 3 சீன சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கடந்த 2026.07.23 ஆம் திகதி இடம்பெற்ற இந்த குற்றம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் விசாரணைகளை...

தனியார் துறை ஊழியர்களுக்கும் ரயில் சீசன் டிக்கெட் வசதி 

தனியார்த்துறை ஊழியர்களுக்கும் இணைய முறையில் ரயில் சீசன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதியை அடுத்த மாதம் செப்டம்பரில் இருந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (21) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை கூறினார். இதற்கமைய, அக்டோபர் மாதத்திற்குள் எந்தவித சிக்கல்களும் இன்றி தனியார் துறை...

About Me

1206 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கினியா நாட்டில் குப்பை மேடு சரிந்ததில் 30 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கினியா நாட்டின் தலைநகர் கொனகெரியில் 'டார் எஸ் சலாம்' என்ற பகுதியில் குப்பை மேடு ஒன்று சரிந்துள்ளது. குறித்த குப்பை மேடு அருகே...
- Advertisement -spot_img