Saturday, May 16, 2026
No menu items!

Tamil Vani

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட காலமாக காட்சிகளைப் பதிவு செய்யவில்லை என குற்றப்புலானய்வு பிரிவு, நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவர் உயிரிழந்த இல்லத்தில் இருந்து காணொளி எதுவும் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அப்பகுதிக்குள்...

அரச நிதி மோசடி தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது!

மென்பொருளை நிறுவுவது தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு பிரிவின் கட்டுப்பாட்டாளரை குற்றப் புலனாய்வு பிரிவு (CID) கைது செய்துள்ளது. 'பயனர் முகாமைத்துவ தொகுதி' (User Management Module) என்ற பெயரில் மென்பொருள் தொகுதி ஒன்றுக்காக 9,831,250 ரூபாய் (சுமார் 9.8 மில்லியன்)...

நீதிமன்றில் தான் குற்றமற்றவர் என வாதிட்ட யோஷித ராஜபக்ஷ; தொடரும் வழக்கு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது. இதன்போது குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாதிட்ட யோஷித ராஜபக்ஷ தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் சதி அடிப்படையிலானது எனவும் தான் குற்றமற்றவர் எனவும் குறிப்பிட்டார். சதி...

2.5 மில்லியன் டொலர் கொள்ளை; ஜனாதிபதியும் விசாரிக்கப்படுவாரா என நாமல் கேள்வி

திறைசேரி நிதி அமைப்பு ஊடுருவப்பட்டு 2.5 மில்லியன் டொலர் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தை "தொழில்நுட்பப் தவறு" என சாதாரணமாக புறக்கணித்து விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். மேலும், இது 2024-ஆம் ஆண்டின் 44-ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் பொது நிதிப் பொறுப்புக்கூறல்...

சீரற்ற வானிலை; மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஏழு (07) மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 489 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 நபர்கள் எட்டு (08) தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கில் ஒரு...

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு நடைமுறை தொடங்கியது. உறுப்பினர்களை எண்ணிக் கணிக்கும் நடைமுறைக்கமைய வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார். வெளியில் சென்ற உறுப்பினர்களை அவைக்கு அழைக்கும் வகையில் 3 முறை மணி ஒலிக்கப்பட்டது....

சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்

இலங்கைக்கு வடகிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்ருப்பதன் காரணமாக, இலங்கை முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த இரண்டு நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல நிலை அடுத்த 48 மணி நேரத்திற்குள்...

இருதய நோய் சிகிச்சை; 3.1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக 16 ஆய்வகங்கள்

அரச வைத்தியசாலைகளில் இந்த வருடம் 16 புதிய இருதய வடிகுழாய் ஆய்வகங்களை (cardiac cath labs) நிறுவ சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு 3.1 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது. இருதய நோயை விரைவாக கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல், காத்திருப்புப் பட்டியல்களைக் குறைத்தல். மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புக்களை குறைத்தல் ஆகியன இந்த திட்டத்தின் நோக்கம்...

சீரற்ற காலநிலை; ஒருவர் உயிரிழப்பு, 62 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டம், கோரளைப்பற்று தெற்கில் இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இரத்தினபுர, காலி, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த...

மாணவன் கத்தி குத்து தாக்குதல்; ஐவருக்கு காயம்

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில் இன்று (13) ஐந்து மாணவர்களைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காயமடைந்த தொழில்நுட்ப உயர் நிலை மாணவர்கள் அனைவரும் சாதாரண காயங்களுடன் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர் அதே...

About Me

613 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50 வீத வரிவிதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே உள்ள 30% சுங்க வரியுடன் மேலதிகமாக 50% மேலதிக வரியை அரசாங்கம் விதித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு...
- Advertisement -spot_img