Thursday, July 9, 2026
No menu items!

Tamil Vani

சிறைச்சாலை வன்முறை;12 பேர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளைச் சந்தித்த அமைச்சர், அவர்களின் உடல்நிலை மற்றும் அவர்களுக்கு...

நவம்பரில் விசாரணைக்கு வரும் நாமலின் க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள க்ரிஷ்' (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 16-ஆம் திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (07)  இதனை அறிவித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அப்பர்ன சுவர்ணதுருக்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த...

கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரள்வு;போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று (07) மாலை 4.45 மணியளவில் ரம்பக்கனை நோக்கிப் புறப்படவிருந்த பயணிகள் ரயில், மாலை 4.50 மணியளவில் நடைமேடைக்குள் நுழையும்போது தடம் புரண்டுள்ளது. குறித்த ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதன் காரணமாக, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் நான்கு நடைமேடைகள் முடங்கியுள்ளன. இந்த விபத்தினால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும்...

‘சிறைச்சாலை மோதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கவில்லை’

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து எந்தவிதமான முன் கூட்டிய உளவுத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கைதிகளின் இடையூறுகளைத் தடுக்க அதிகாரிகள் முயன்றதாகவும், பாதிப்பின் அளவைக் குறைக்க அவர்கள் போராடியதாகவும் அவர் மேலும் கூறினார். இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை சந்திப்புக்கு பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், வன்முறை ஏற்பட்ட...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சூழல் தற்போது பாதுகாப்புப் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், பெண் கைதிகள் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல்களில் படுகாயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட அதிரடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் வான் பாதுகாப்பு கட்டமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக. தெரிவிக்கப்படுகிறது. நேற்று (06) அதிகாலை உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யா 351 தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் 68 ஏவுகணைகளை ஏவி...

 பாவனைக்கு பொருத்தமற்ற 4,250 மெட்ரிக் தொன் சீனி கையிருப்பு மீட்பு

பேலியகொடை, பெத்தியாகொட பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 4,250 மெட்ரிக் தொன் சீனியை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று (06) முற்றுகையிட்டு கைப்பற்றியுள்ளனர். இதன்போது சுமார் 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான 85,000 சீனி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றைத் தொடர்ந்து, நுகர்வோர்...

அரசாங்கத்தின் நெல் கொள்முதல் விலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம்

அரசாங்கம் நிர்ணயித்துள்ள உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரிசி ஆலை உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில், நாட்டு நெல் கிலோ ஒன்றிற்கு...

நீர்கொழும்பு சிறை கலவரம்: 700 கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வன்முறையை தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (05) இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே ஆரம்பித்த மோதல் அதிகரித்ததை அடுத்து, இன்று இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மோதல் விளக்கமறியலில் உள்ள கைதிகள் குழுவிற்கும்,...

சிறை மோதல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெறும்; நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் குறித்து தான் மிகவும்  அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும்  சிறைச்சாலைகள், நீதி அமைச்சின் பொறுப்பின் கீழ் உள்ளது என்ற வகையில் சம்பவத்திற்கு தானே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். சம்பவம் குறித்து (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், சிறைச்சாலையில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,...

About Me

928 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...
- Advertisement -spot_img