Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

அனர்த்த உதவியாக இரண்டு கள மருத்துவமனைகள்-70க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவப் படையினர் இலங்கையில்..!!

'டிட்வா' சூறாவளியால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்களுக்குச் சிகிச்சையளிக்கும் நோக்கில், 70 இற்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மருத்துவ மற்றும் துணைப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய வாகனங்களுடன் கூடிய இந்திய விமானப்படையின் பாரிய C-17 ரக விமானம்  நேற்று (மாலை) கொழும்பில் தரையிறங்கியது. இந்தியா வழங்கியுள்ள விரைவாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டு கள மருத்துவமனைகளின் (Field Hospitals) முதல்...

மீண்டும் திறக்கப்பட்டுள்ள கடுவெல – பத்தரமுல்ல வீதி..!!

வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக கடுவெல நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த அத்துருகிரிய  நுழைவாயிலும் நேற்று (02) திறக்கப்பட்டது. அதன்படி,...

Frozen Vegetables ஐ  இறக்குமதி செய்ய அனுமதி..!!

நாட்டில் நிலவும் பேரிடர் காரணமாக உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாத் துறை மற்றும் விருந்தகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முக்கியமான முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் தரங்களுக்கு இணங்க, எதிர்வரும் 2 மாதங்களுக்குத் தேவையான உறைந்த காய்கறிகளை (Frozen Vegetables) தட்டுப்பாடு இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில்...

இன்றைய நாளுக்கான வானிலை – பொதுமக்கள் அவதானம்..!!

வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி  மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில...

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதிகள் அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழநிலை காரணமாக அரச மற்றும் தனியார் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதிகளை  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக நடத்த முடியாதுபோன க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்...

பேரிடர் தொடர்பில் பொய்யான தகவல் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை!

பேரிடர் காலப்பகுதிகளில் பொய்யான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன. இந்நிலையில் இந்த தகவலை பரப்பியர்களை உடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி...

டித்வா புயலினால் 400 ஐ தாண்டிய பலியானோர் எண்ணிக்கை..!!

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் 25 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (02) காலை​ 10 மணிக்கு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 336 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு...

பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்..!!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்றும் (02) ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்றும் அவர் மேலும்...

இன்றைய நாளுக்கான வானிலை –  மக்கள் அவதானம்..!!

வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

நாடு முழுவதிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல்...

About Me

862 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

இயன் மருத்துவர் கொலை; நால்வருக்கு விளக்கமறியல்

தெல்தெனியவில் காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இயன் மருத்துவரின் சடலம் தொடர்பாக, பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் ஜூலை 9 ஆம் திகதி...
- Advertisement -spot_img