Thursday, April 30, 2026
No menu items!

Tamil Vani

உயர்ந்த நிலையை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை..!!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (11) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. இன்றைய (11) வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 18,541.26 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இன்று, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 379.77 அலகுகளாக பாரியளவு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன்...

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னியா மக்கள்..!

கன்னியா - பிலியடி நடன காளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்  வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் (11) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாம் பெற்ற வரிச் சலுகை நியாயமானதா?? – சஜித் பிரேமதாச!

எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. ஆடைத்துறையில் 60% ஏற்றுமதி தலமாகவும் அமெரிக்கா நாடே இருந்து வருகிறது. தீர்வை வரியை 44% இலிருந்து 30% ஆகக் குறைந்தமை நல்லதொரு விடயமாகும்  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வௌ்ளிக்கிழமை (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். என்றாலும், எங்களுடன்...

எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கரின் புதிய புகைப்படம்..!!

உலகப் புகழ் பெற்ற லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்திலுள்ள எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கரின் புதிய புகைப்படம் ஒன்று நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் கிரிக்கெட்டில் சாதனைப் படைக்கும் வீரர்கள் பெயர், பெயர்ப் பலகையில் பொறிக்கப்படும். அத்தோடு, கிரிக்கெட் சாதனைப் படைத்தவர்கள் படங்கள் இங்கு இடம் பெற்றிருக்கும். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கரின்...

இஸ்ரேல், காசா மீது மீண்டும் போர் நடத்தும் – பெஞ்சமின் நெதன்யாகு!!

60 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இஸ்ரேல், காசா மீது மீண்டும் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாகப் போர் இடம்பெற்று வருகிறது. இந்தநிலையில், ஹமாஸ் உடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்...

காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்..!!

சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டுபாயில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களினால் இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த சிரேஸ்ட அதிகாரிகள், பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் சென்ற 9 பயணிகள் சுட்டுக் கொலை -பாகிஸ்தான்!!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் சென்ற 9 பயணிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள், பயணிகளை இறக்கி சோதனை செய்தபிறகு  9 பேரை சுட்டுக் கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

65 வயது பாட்டிக்கு பாலியல் வன்கொடுமை..!!

இந்தியா, இமாச்சலப் பிரதேசத்தில் 65 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது பேரன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்த மூதாட்டியை கடந்த   ஜூலை 3 ஆம் திகதி மதியம், அவரது பேரன் வீட்டிற்கு வந்து  பாலியல் வன்கொடுமை செய்து, இந்த சம்பவம்...

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – கனடா!!

கனடாவில் விமானப் பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனிடோபா (Manitoba) - ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில், குறித்த இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வின்னிபெக்கில் (Winnipeg) இருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில்,...

மீண்டும் அதிகாரபூர்வ கடிதத்தை வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்..!!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கான, தனது அதிகாரபூர்வ கடிதத்தை மீண்டும் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை ஜனாதிபதி அனுரவின் பெயரை "அருண" என்று தவறாக ஆரம்பக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தமை, இந்த கடிதத்தில் திருத்தப்பட்டுள்ளது. 2025, ஜூலை 9, திகதியிட்ட திருத்தப்பட்ட கடிதம், ஆகஸ்ட் 1 முதல், இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி...

About Me

526 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img