Friday, July 10, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

தேர்தல் மற்றும் கட்சியில் இருந்து விலகும் அஜித் மான்னப்பெரும…!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தேர்தலில் இருந்து விலகுவதாகவும் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இதனை இன்று சனிக்கிழமை (12.10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்  கம்பஹா தொகுதியின் பிரதம அமைப்பாளர் பதவியில் இருந்து...

நான் தமிழ் அரசு கட்சியில் இருந்து விலகவில்லை; மாவை சேனாதிராசா…!

இலங்கை தமிழ் அரசு கட்சியில் சிலரின் தன்னிச்சையான முடிவுகளை நான் ஏற்கவில்லை. அதனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்க தீர்மானித்து, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலிருந்து விலகி இருக்கிறேன் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்று தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் அரசு கூட்டணியினர்...

மன்னார்  குருவில்வான் கிராமத்தில் வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினால் அமைக்கப்பட்ட புதிய வீடு கையளிப்பு.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குருவில்வான் கிராமத்தில் வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினால் அமைக்கப்பட்ட புதிய வீடு இன்றைய தினம் சனிக்கிழமை(12) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு குறித்த குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 10 வது கெமுனு கோவா படைப் பிரிவினால் அமைக்கப்பட்ட குறித்த வீடு தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு...

நிதி மோசடியில் ஈடுபட்ட 120 சீனப் பிரஜைகள் கைது…!

இணைய வழியிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 120 சீனப் பிரஜைகளைக் கொண்ட குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்கியிருந்த குண்டசாலையில் உள்ள சொகுசு பங்களாவின் 47 அறைகளில் இருந்து 15 மடிக் கணினிகள், 300 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்.வல்வை பாலத்துக்கு அருகில் விபத்து; ஒருவர் பலி…!

யாழ்ப்பாணம் - வல்வை பாலத்துக்கு அருகில் இன்று (12.10) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள், பட்டா வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை, முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…!

வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போவல பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன்  இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 42 வயதுடைய...

அதிகளவான அரசியல்வாதிகள் போட்டியிடாத முதல் பொதுத் தேர்தல்…!

நாடளாவிய ரீதியில் அதிகளவான அரசியல்வாதிகள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது இதுவே முதல் முறை என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக இவ்வருட தேர்தல் மிகவும் முக்கியமானது என சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். மேலும்,  இந்த வருடம் 50க்கும் அதிகமான அரசியல்வாதிகள் தேர்தலில்  இருந்து...

துண்டிக்கப்பட்ட மேல் மற்றும் தென் மாகாணங்களின் போக்குவரத்து…!

மேல் மற்றும் தென் மாகாணங்களில், வெள்ளம் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, பண்டாரகம - கொலமதிரிய, பாலிந்தநுவர - பதுரலிய, பரல்லாவிட்ட - அவிட்டாவ, களுத்துறை - மத்துகம, புலத்சிங்கள - மொல்கா ஆகிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் மினுவாங்கொடை,...

மீள திறக்கப்பட்ட அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதியின் பாதுகாப்பு சாவடிகள் அகற்றம்…!

அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொட்டுண்டா சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் வீதி பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, வீதியின் இருபுறமும் இருந்த பாதுகாப்பு சாவடிகள் கொழும்பு மாநகரசபையால் இன்று (11.10) அகற்றப்பட்டன. கடந்த 2005ம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வீதி 19 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம், நீண்டகாலமாக பயணிக்க முடியாத நிலையில்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது…!

கல்கிசை பொலிஸ்  பிரிவுற்குட்பட்ட படோவிட்ட மற்றும் ஒபியன் சந்திக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இரத்மலானை மற்றும்...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...