Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு..!

மட்டக்களப்பில் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்த முன்னாள் இரரஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேட்பு மனு நேற்று வெள்ளிக்கிழமை (11) நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன்  அறிவித்தார். மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) தேர்தல் வேட்புமனு...

தமிழ் மக்களின் அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பியை நோக்கியதாகவே இருக்கும் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

மத்தியில் அரசியலில் மக்கள் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வந்தார்களோ அதேபோன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அந்த அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பியின் வசம் செல்ல மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான...

திருமண நிகழ்வில் ஒருவர் அடித்துக் கொலை…!

அங்குலானை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் வளாகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) இரவு இடம்பெற்றுள்ளது. அங்குலானை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, இந்த திருமண நிகழ்வின் போது கொலை...

மட்டக்களப்பில் 49 வேட்புமனுக்கள் ஏற்பு கட்சி ஒன்று உட்பட 7 வேட்புமனு நிராகரிப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது இதில் ஒரு கட்சி 6 சுயேச்சைகுளுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 22 கட்சிகள் 27 சுயேச்சைக் குளுக்கள் உட்பட 49 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் 392 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும்...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு காரினை அரசுடமையாக்க உத்தரவு…!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு காரொன்றை அரசுடமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக...

மறு அறிவித்தல் வரை கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை…!

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5...

மருமகனை தாக்கிய மாமனார்…!

பலாங்கொடை தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) தெரிவித்தனர். பலாங்கொட தம்மானே பகுதியைச் சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கச் செல்லும் போது மனைவியின் தந்தை...

விருப்பு எண்கள் வெளியிடுவது தொடர்பில் அறிவித்தல்…!

ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களுக்கு அமைய வேட்பாளர்களின் விருப்பு எண்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட...

ஜனாதிபதிக்கும் யு.எஸ்.எய்ட் பிரதானி சமந்தா பவருக்கும் இடையில் கலந்துரையாடல்…!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் பிரதானி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொலைகாணொளி ஊடாக நேற்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கைக்கும் யு.எஸ்.எய்ட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும்...

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்…!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.56 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.04 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...