Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 20 பேர் பொதுத் தேர்தலில் போட்டியிடாமலிருக்க தீர்மானம்…!

முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 20 பேர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமலிருக்க தீர்மானித்துள்ளனர். அவர்களுள் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரபால சிறிசேன ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இவ்வாறு தீர்மானித்தவர்களுள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் கிரிஎல்ல, ஷான் விஜயலால் த சில்வா,...

யாழ்.பலசரக்கு கடையில் போதை மாத்திரை விற்பனை…!

யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் பொலிஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில் வீதி மானிப்பாயில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த கடையினை பொலிஸார் சோதனையிட்டனர். சோதனையின் போது கடையின் பின் பகுதியில் இருந்து 50...

பல கட்சிகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவு…!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் பல கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிகளில் போட்டியிட்ட பல கட்சிகள் தேசிய மக்கள் சக்தியின் கூட்டணியின் கீழ் போட்டியிட பேச்சுகள்...

ரயில் மோதியதில் தாயும் மகனும் பலி…!

திருகோணமலை - சீனக்குடா பகுதியில் நேற்று (11.10) பிற்பகல் ரயில் மோதி தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தந்தை கொண்டு வந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு ரயில் பாதையை கடக்கும் போதே இந்த விபத்து...

CBSL இன் வருடாந்திர நிதி நிலைத்தன்மை மதிப்பாய்வு..!

இலங்கை மத்திய வங்கி (CBSL) 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 70(1) இன் படி, 2024 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்த நிதி நிலைத்தன்மை மீளாய்வை (FSR) வெளியிட்டுள்ளது. CBSL இன் படி, இந்த சட்டரீதியான அறிக்கை நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையின் மதிப்பீட்டை வழங்குகிறது, அதனுடன்...

இரு வருட ஒப்பந்தம் வழங்கிய மே.இ.தீவுகள் கிரிக்கெட் சபை..!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த ஒப்பந்தத்தில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 6 வீரர்கள் இரண்டு வருடங்களுக்கான தேசிய ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி ஷைய் ஹோப், அல்ஷாரி ஜோசப், ஷெமார் ஜோசப், பிரெண்டன் கிங், குடகேஷ் மோட்டி மற்றும் ஜெய்டன் சீல்ஸ் போன்ற வீரர்கள் 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர்.

வெலிப்பன்ன இடமாறல் மீண்டும் திறப்பு..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன இடமாறல் இன்று (12) காலை 7.00 மணிக்கு போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிபன்ன இடமாறல் நேற்று காலை வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த இடம் மூடப்பட்டிருந்தது.

இன்றைய நாளுக்கான வானிலை…!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம்...

பொதுத் தேர்தலுக்காக 241 பேர் வேட்பு மனுத் தாக்கல்…!

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக இதுவரை 241 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகளின் சார்பில் 147 பேரும் சுயேட்சை குழுவாக  94  பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கிடையிலான சந்திப்பு…!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். இலங்கையில் உணவு நெருக்கடி நிலைமை தற்போது குறைவாக உள்ள போதிலும், தேவை...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...