Tuesday, July 7, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது..!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது. 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளை doenets.lkமற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும்...

இன்றைய நாளுக்குரிய வானிலை….!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும்...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்க விசேட குழு…!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

திருக்கோவிலில் சட்டவிரோதமாக செட்கண் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த ஒருவர் கைது…!

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக செட்கண் ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்து மிருகவேட்டையாடிவரும் 54 வயதுடைய ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (27.09) இரவு 8 துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் யு.எல்.எஸ். ஆப்தீன் தெரிவித்தார். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து...

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் குழுக் கடமைகளில் ஈடுபட்ட அலுவலர்களுடனான  கலந்துரையாடல்…!

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் குழுக் கடமைகளில் ஈடுபட்ட அலுவலர்களுடான  கலந்துரையாட லானது யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்  (26.09.2024) மாலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், ஜனாதிபதித் தேர்தலிலானது சுமூகமாக நடைபெற்றுள்ளதாகவும்,  இத் தேர்தல்...

சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்..!

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்வாடிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். இரத்தினபுரி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி பெல்வாடிய பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞரே கைது...

16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய 16 வயது சிறுவன் கைது…!

பாடசாலையில் தரம் 11 ம் ஆண்டில் கல்விகற்றுவரும் 16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த அதே தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய  சிறுவன் ஒருவரை  நேற்று வெள்ளிக்கிழமை (27.09)  கைது செய்யப்பட்ட சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம்...

இன்றைய தங்க விலை மாற்றங்கள்..!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (28) சனிக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 26,500 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 212,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 24,500...

லுணுகலையில்  பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி..!  

சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை, ஜன உதான கம்மான யப்பாம ஹொப்டன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 5 வயதும் 6 மாதமும் கொண்ட சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும்...

மட்டுவிலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை ..!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் வீதியில் சத்தம் எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 19 வயது இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 30 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (27) இரவு இடம்பெற்றதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 19...
- Advertisement -

Latest News

நீர்கொழும்பு சிறை கலவரம்: 700 கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வன்முறையை தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக...