Tuesday, July 7, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர் உயிரிழப்பு! 

பலாங்கொடை வெலிகேபொல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை வெலிகேபொல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் சுவாசிப்பதற்குச் சிரமம் ஏற்பட்டு முதியவர் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மூடப்படவுள்ள மதுபானசாலைகள்!

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுபானம் அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இந்தநிலையில் மது அருந்துவதால் நாட்டில் நாளொன்றுக்கு 50 பேர்வரையில் மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு...

இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விஜித ஹேரத்தின் கருத்து!

இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுவதால், தற்போது அவை கூட்டத்தொடரில் இல்லை. பாராளுமன்றம் இயங்காமல் செயற்படுவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடி வருவதாக அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தீர்வு காணப்படும் வரை அல்லது புதிய பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் வரை இந்த தாமதம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என...

உள்நாட்டு வருவாய்த் துறையின் எச்சரிக்கை..!

இலங்கையில் உள்ள பொதுமக்கள் 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கொடுப்பனவுகளை செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவிற்குள் வரி செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் மற்றும் வட்டி வசூலிக்கப்படும் என்று உள்நாட்டு வருவாய்த் துறை (IRD) எச்சரித்துள்ளது. வருமான வரி செலுத்தாததற்கு அல்லது தாமதமாக செலுத்துவதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் வட்டி...

ரணில் விக்ரமசிங்கவைத் தலைவர் பதவியிலிருந்து விலக்கக் கோரல்..!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி (SJB) கூட்டணி அமைக்க விரும்பினால், ரணில் விக்ரமசிங்கவைத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்...

பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது…!

கிரிபத்கொட பகுதியில் வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை  கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் 37 வயதுடைய கந்தானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், போலி ஆவணங்களை தயாரித்து 130,000,00 ரூபாவுக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் இவருடன் இந்த...

சீமெந்து மூலப்பொருட்கள் மேலே விழுந்து ஒருவர் உயிரிழப்பு..!

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் ஒப்பந்த நிறுவனமொன்றில் பணிபுரிந்த வீல் லோடர் சாரதி ஒருவர் லொறிகளில் சீமெந்து மூலப்பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த போது சீமெந்து மூலப்பொருட்கள் மேலே விழுந்து உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் லுனுகம்வெஹரவின் தென் கரையில் உள்ள ஜனுதான கிராமத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த நபர் சீமெந்து தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை வீல்...

சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள்..!

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகாரத்தின் அடிப்படையில் கடந்தாண்டு மே மாதம் முதல் 172 மதுபான அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனூடாக, சுமார் 220 கோடி ரூபா வருமானம் ஈட்ட முடியும்...

இலங்கை ஜனாதிபதியை சந்திக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்..!

இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ. ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக அனுரகுமார திசநாயக்க புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள்குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறு திருத்த விண்ணப்பம் – GCE OL EXAM 2023..!

2023 ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. GCE OL EXAM 2023 மறு  திருத்த விண்ணப்பங்கள் பரீட்சை திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளது. மறு திருத்த விண்ணப்பங்களை  அக்டோபர் 1 முதல் 14 அக்டோபர் 2024 வரை விண்ணப்பிக்கலாம் என  பரீட்சைகள்...
- Advertisement -

Latest News

நீர்கொழும்பு சிறை கலவரம்: 700 கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வன்முறையை தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக...