Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

தேர்தல் வன்முறைகள் குறைவு; தேர்தல்கள் ஆணைக்குழு…!

2019 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும்போது தேர்தல் வன்முறைகள் 43வீதத்தினால் குறைவடைந்து காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை 31ம் திகதி  முதல் செப்டம்பர் ஐந்தாம் திகதி வரை 2460 தேர்தல்வன்முறைகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் ( 2387) தேர்தல் சட்ட மீறல்கள் என்ற வகைக்குள்...

பஸ் மற்றும் ரயில்களில் பயணித்த பயணிகளின் சொத்துக்களை திருடிய நபர் கைது…!

களுத்துறை பகுதியில் பஸ் மற்றும் ரயில்களில் பயணித்த பயணிகளின் சொத்துக்களை திருடிய குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (07.09) களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த...

அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் பிரச்சாரம்…!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி தொழிற்ச்சங்க பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சியில் பிரச்சார பணிகளை ஆரம்பித்தனர்.தேசிய மக்கள் சக்தியின் தொண்டமான் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து பிரச்சார பணிகளை ஆரம்பித்தனர். குறித்த பிரச்சார நடவடிக்கையில் சமிர அல்விஸ் தேசிய மக்கள் சக்தியின்  வங்கி மற்றும் நிதி...

கல்முனை, கெபித்திகொல்லேவ பகுதிகளில் காட்டு யானை தாக்கி இருவர் பலி…!

கல்முனை, கெபித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் தாக்குதலினால் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை பஸ் நிலையத்துக்கு பின்புறம் உள்ள வீதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருவள்ளுவர் மத்திய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, கெபித்திகொல்லேவ பகுதியிலுள்ள மயானமொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் காட்டு...

வாக்குச் சீட்டை  ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் அதிபர்  கைது…!

முல்லைத்தீவில் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு வாக்குச் சீட்டை  ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் அதிபர்  ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை  நேற்று(07.09) இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் கடந்த 04,05,06 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது இவ்வாறு  நேற்று முன்தினம் (06.09) முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு வலயக்கல்வி...

வாக்குச் சீட்டை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்தவர் கைது…!

மூதூர் லங்காம டிப்போவில் உள்ள தபால் வாக்களிப்பு நிலையத்தில் குறித்த டிப்போவில் பணிபுரியும் சாரதி ஒருவர் வாக்குச் சீட்டை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தபால் வாக்குச்சாவடியில் சான்றிதழ் வழங்கும் அதிகாரியாக கடமையாற்றிய டிப்போ பிரதி முகாமையாளர் மொஹமட் அனிபா அன்வர் சதாத் மூதூர் பொலிஸில் முறைப்பாடு...

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்…!

பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது. மேக்ரோ பொருளாதார அபிவிருத்திகளை, குறிப்பாக உள்ளூர் அந்நிய செலாவணி சந்தை நிலவரங்களின் அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச்...

மீனவ மக்களுக்கு வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை…!

மத்திய வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (08.09) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்பு உள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடல் மற்றும் மீனவ மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடமேற்கு வங்கக்கடலில்...

மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் 14 வது ஆண்டு நிறைவு விழா…!

மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முப்படையினர் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வுகளின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை(07.09) மதியம் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மன்னார் தள்ளாடி இராணுவத்தின்  54 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர். ...

தபால்காரரை தாக்கிய நபர் கைது…!

களுத்துறை தெற்கு தபால் நிலையத்தில் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் போது தபால்காரரை தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை ஜாவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தபால்காரரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...