Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

யாழில் வன்முறை கும்பலொன்றினால் வேன் மற்றும் காரிற்கு தீ வைப்பு…!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலொன்றினால் வேன் மற்றும் கார் நேற்றைய தினம் சனிக்கிழமை (7.09) இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன்போது தீயை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்  - கோப்பாய் பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள்...

அனுரகுமாரதிசாநாயக்கவின் உடல்நலம் பாதிப்பு…!

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க உடல்களைப்பு காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். உடல்நிலை சரியில்லாததால் மாத்தறையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அனுரகுமாரதிசநாயக்க கலந்துகொள்ளவில்லை என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அனுரகுமார உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார், கடந்த...

எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படும்; நாமல்…!

உலக தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பண்டாரவளை சுப்பிரமணியம் மண்டபத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான உலகைக் கட்டியெழுப்பவே இந்த...

சீமெந்துக்கு விதிக்கப்பட்ட வரி குறைப்பு…!

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி கிலோ ஒன்றுக்கு 1 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணை…!

வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்ட அரசியல் கட்சியொன்றின் உயர்பீட உறுப்பினர் மீது வவுனியா பொலிஸார் விசாரணைகளை நேற்று சனிக்கிழமை (07.09) முன்னெடுத்துள்ளதுடன், அவரது கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்பானது கடந்த 4,5,6ஆம் திகதிகளில் இடம்பெற்ற நிலையில் 5ஆம் திகதி மாலை தனக்கு சொந்தமான முகப்புத்தகத்தில் குறித்த கட்சியின் உயர் பீட உறுப்பினரும், பொது...

அதிகரிக்கும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்…!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் நேற்றுடன் முடிவடைந்த ஒரு மாத காலப்பகுதியில்  தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வந்த...

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்…!

பொலன்னறுவை கதுருவெல வீதியிலுள்ள வணிக வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினரால் 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பரவாமல் தடுக்க இராணுவம், பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இதன்...

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்…!

கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (07.09) இச்சம்பவம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. குஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதேபோன்று கடந்த 06...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 2000 ரூபாயாக மாற்றுவது கடினம் அல்ல; திலித் ஜயவீர…!

சர்வஜன அதிகாரம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் நேற்று (07.09) நுவரெலியாவில் இடம்பெற்றதுடன், அதில் அதன் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார். கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதத்தில் கலந்து கொண்டதன் காரணமாக காணொளி தொழில்நுட்பம் மூலம் இந்த கூட்டத்தில் அவர் உரையாற்றியுள்ளார். அங்கு உரையாற்றிய சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர்...

ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பு ரணிலுக்கு உள்ளது; மாவைசேனாதி ராஜா…!

வடக்கில் ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பாரிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணிலுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த கட்சியின் தலைவர் மாவைசேனாதி ராஜா இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம்...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...