Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இலங்கை தொடர்பில் தன்சானியாவின் தீர்மானம்…!

தன்சானியாவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார். தற்போது, வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் தன்சானியாவிற்கு இணையம் வழியாக விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தன்சானிய அரசாங்கத்துடனான விரிவான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இலங்கை பரிந்துரை விசா பட்டியலில் இருந்து...

யானை தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் பலி…!

புஞ்சிஹல்மில்லேவ பிரதேசத்தில் வயல்வெளிக்குள் புகுந்த யானைகளை விரட்ட முற்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஹடகஸ்திகிலிய, ரன்பத்வில பிரதேசத்தில் வசித்து வந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயான ஆர்.டபிள்யூ.எம்.ஜி.அபேரத்ன என்ற 52 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் இ.எஸ்.அபேசேகர உள்ளிட்ட...

தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு விடுத்த அறிவித்தல்…!

ஏற்கனவே பதிவான வாக்குகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு அறிவித்துள்ளது. சமூக ஊடக தளங்களில் இருந்து இடுகையை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றியவர்கள் மற்றும் பல்வேறு தளங்களில் பகிர்ந்தவர்கள் மீது...

ஜனாதிபதியின் திட்டம் முற்றாக வீழ்ச்சி…!

ஜனாதிபதி தேர்தலுக்காக 90 பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரப் பிரிவு திட்டமிட்டிருந்த போதிலும், அத்திட்டம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, தற்போது 30 பேரணிகள் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் அவர் நடத்திய பேரணிகளின் எண்ணிக்கையும், மீதமுள்ள இலக்குகளை அடுத்த 10 நாட்களில் நிறைவு செய்ய முடியாத நிலையும் உள்ளது...

கம்போடியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞர் பலி…!

கம்போடியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ள வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. லக்ஷபான பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும், அவர், கடந்த மாதம் 22ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரமான உயரமான மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த...

தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் கைது…!

காற்சட்டைப் பையில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (07.09) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும் 3 தங்க பிஸ்கட் துண்டுகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவின் சென்னையிலிருந்து...

14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது…!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று சனிக்கிழமை (07.09) மாலை கைது  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களேகைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்றொழிலிற்கு பயன்படுத்திய 3 படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக்...

ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட வாக்குச்சீட்டு விநியோகம்…!

ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (08.09) காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை வரை வாக்குச்சீட்டு விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (06.09)...

இன்றைய நாளுக்கான வானிலை….

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்...

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக விஜயகலா யாழில் பிரச்சாரம்…!

சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் திருநெல்வேலிசந்தைப் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனால் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. திருநெல்வேலி சந்தை பகுதியிலுள்ள மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இன்று சனிக்கிழமை காலை துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் போது விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். நாடு...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...