Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியாவில் பிரச்சாரம்…!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியா நகரில் பிரச்சாரநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் தலைமையில் குறித்த நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது வவுனியா தினச்சந்தை, நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதேவேளை, குறித்த நடவடிக்கை நாடளாவிய...

அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும்; நல்லதம்பி சிறிக்காந்தா…!

தமிழ் மக்களின் நீண்ட கால இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முடியாத ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணிமான நல்லதம்பி சிறிக்காந்தா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது...

நீராடச் சென்று காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு…!

கிங் கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன மாணவனின் சடலம் இன்று (06.09) பிற்பகல் மீட்கப்பட்டதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெலுவ கடஹிங்கல பகுதியைச் சேர்ந்த ஜனிது சுரேந்திரா 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹப்பிட்டிய, எஹலபிட்டிய பிரதேசத்தில் மூன்று நண்பர்களுடன் ஜின் கங்கையில் நீராடச் சென்று காணாமல் போயுள்ளார். காணாமல் போன மாணவனைத் தேடி காலி...

மூதாட்டியின் கழுத்தை மிதித்து கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்…!

கொட்டாவ மாலபே பகுதியில் 10,000 ரூபா பணம் கேட்டு அதனை தர மறுத்ததால் மூதாட்டியின் கழுத்தை மிதித்து கொலை செய்த சந்தேக நபரை கைதுசெய்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார். 80 வயதுதுடைய மூதாட்டியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின்...

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது…!

கொழும்பு கிராண்ட்பாஸ், மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டி மற்றும் மட்டக்குளிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25...

விக்னேஸ்வரன் சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை; அனுர…!

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். தேர்தல் பரப்புரைகளுக்காக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், “அனுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி...

பொலன்னறுவையில் இடம்பெற்ற விபத்தில் இந்திய பிரஜை பலி…!

பொலன்னறுவை, ஜயந்திபுர பிரதேசத்தில் நேற்று (06.09) இரவு இடம்பெற்ற விபத்தில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவையிலிருந்து மின்னேரியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது வேனில் பயணித்த இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...

வெடிபொருட்களுடன் இருவர் கைது…!

தம்புள்ளை நகரத்தில் வெடிபொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (06.09) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய இரண்டு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து...

நாங்கள் தவறு செய்தோம் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்; நாமல்…!

கடந்த காலத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அவற்றை மறந்து இப்போது பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். வலப்பனையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத் துறையை நவீனமயமாக்குவதற்கும் பலப்படுத்துவதற்கும் பொதுஜன பெரமுன...

வரலாற்றில் முதல் தடவையாக 1000 பில்லியன் ரூபா சுங்க வருமானம்…!

இலங்கையின் சுங்கத் திணைக்களம் இவ்வருடத்தின் கடந்த 8 மாதங்களில் 1000 பில்லியன் ரூபாவை சுங்க வருமானமாகப் பெற்றுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இது வரலாற்றில் முதல் தடவை எனவும் அதன் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் 2024ஆம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வருமான இலக்காக 1534 பில்லியன் ரூபாவை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், 2024ஆம்...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...