Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரிய குளம் நாகவிகாரைக்கு விஜயம்..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரிய குளம் நாகவிகாரைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நல்லை ஆதீனத்தில் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். இதேவேளை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஜனாதிபதி ரணில்...

பாராளுமன்றத்திற்கு அருகில் விபத்து…!

பாராளுமன்றத்திற்கு அருகில் இன்று (03.08) சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகத்துடன் பயணித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீடொன்றின் மீது மோதிய வேன்… !

அயகம - எகல்ஓயா வீதியில் அயகம, கவரகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். வேன் சாரதி உறங்கியதால் வேன் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீடொன்றின் சுவரில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது. இந்த விபத்தின் போது வேனில் பயணித்த மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

புத்தல – கதிர்காமம் வீதியில் அதிகரித்த புலிகளின் நடமாட்டம்…!

புத்தல - கதிர்காமம் வீதியில் புலிகளின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதால் பிரதேசவாசிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாகவும் உணவு தேவைக்காகவும் இந்த புலிகள் பெரும்பாலும் பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் வீதியில் நடமாடுகின்றன. எனவே, புத்தல - கதிர்காமம் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாவ-பன்னிப்பிட்டியவுக்கு இடையிலான அதிவேக வீதியில்  கடும் வாகன நெரிசல்… !

கொட்டாவ மற்றும் பன்னிப்பிட்டியவுக்கு இடையிலான அதிவேக வீதியில்  கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும்,நெரிசலை சீர் செய்யும் பணியில் நுகேகொடை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் தேர் உற்சவம்..!

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்ப தேர் உற்சவம் இன்று 03 சனிக்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆலய குரு இரத்திபூரண...

மாத்தறையில் வளர்ப்பு நாயையும் அதன் குட்டிகளையும் விழுங்கிய மலைப்பாம்பு…!

மாத்தறை, மாகந்துர பகுதியில்  வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாயையும் அதன் நான்கு குட்டிகளையும் மலைப்பாம்பு ஒன்று விழுங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டு முற்றத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயும் அதன் நான்கு குட்டிகளும் காணாமல் போயுள்ள நிலையில் மலைப்பாம்பு ஒன்று அசைய முடியாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், தங்களது வளர்ப்பு நாயையும் அதன் நான்கு குட்டிகளையும் இந்த மலைப்பாம்பு...

மாணிக்கக்கல் வர்த்தகர்களிடமிருந்து இரண்டு கோடி ரூபா கொள்ளை; 6 பேர் கைது…!

சீதுவ லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாணிக்கக்கல் வர்த்தகர்கள் இருவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபா கொள்ளையடித்த  சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் உட்பட 6 பேரை  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக் கொள்ளை சம்பவம் தொடர்பில், வாகரை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும், ...

இலங்கை கடற்படை ரோந்து படகு முட்டியதில் உயிரிழந்த மீனவரின் சடலம் கடல் வழியாக இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.

இராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் மீன்பிடி படகு நடுக்கடலில் மூழ்கியதில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர் உடல் மற்றும் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் இன்று (3) அதிகாலை  கடல் வழியாக இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். இலங்கை கடற்படை ரோந்து படகு ஒரே முட்டு முட்டியதில்...

முட்டை இறக்குமதி தொடர்பான அறிவித்தல்…!

விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான முறைமையை அரசாங்கம் தயாரிக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி செய்வதன் ஊடாக உள்நாட்டு தொழில் அழிவை சந்திக்கும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...