Friday, July 10, 2026
No menu items!

News Line

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு  

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு  பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் குறித்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள்  என்பவற்றை கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர்...

கிளிநொச்சியில் பஸ் – வேன் விபத்து  

கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று  (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று , வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதுடன்  எதிரே...

மின்சார சபையை ஏமாற்றும் ராஜபக்ச குடும்பம்  

நாடாளுமன்றத்தின் மூலம் மின்சார சபைக்கு 7 கோடி ரூபாவுக்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கயில்  6 மாதங்களுக்கு இந்த கட்டணம் செலுத்த வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் 9 லட்சம் ரூபா மின்சாரக்...

டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை நிராகரித்தது ஆசிய இணைய கூட்டமைப்பு  

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த விவாதத்தில் வெளியிட்ட கருத்துக்களை நிராகரித்துள்ளது. ஆசிய இணைய கூட்டமைப்பு நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அதன் தற்போதைய வடிவத்தில் முன்னெடுக்க முடியாது என்றும்  , இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் சாத்தியாமான  வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டினை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. உலகின் மிகவும் வலுவான...

நமீபியா அணியை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் 2 போட்டிகள நடைபெற்றிருந்தன. இதில் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியிருந்தது. மற்றைய போட்டியில் அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி...

அமெரிக்காவில் 8 பேர் பலி..!

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் ஜுலியட் பகுதியில் உள்ள  இரண்டு வீடுகளில் இன்று துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பம் குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் ரோமியோ நான்சி என்ற நபரே துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு...

அமெரிக்க பனிப் புயலில் 90 இற்கு மேற்பட்டோர் பலி

அமெரிக்காவில் கடந்த வாரம் முழுதும் வீசிய பனிப் புயலில் 90க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டென்னசீ, ஒரேகன் உள்ளிட்ட மாநிலங்களிலே இவ்  மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் கடுமையான பனிப்புயல் காரணமாக குறித்த மாநிலங்களில் நெருக்கடிநிலை இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருவதுடன் இந்த வாரமும் பனிப்புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்  டென்னசீயில் குழாய்கள் உடைந்துள்ளமையால் சுமார்...

யாழ். நெடுந்தீவில் மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 தமிழக  மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்டு இருந்த தமிழக  மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களின் இரண்டு படகுகளையும் மீட்டு இருந்தனர். மேலும் கைது செய்யப்பட்ட...

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு ஜனாதிபதி வாழ்த்து

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அணிசேரா மாநாட்டுக்காக உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக  நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை...

க.பொ.த சாதாரண தர  பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

க.பொ.த சாதாரண தர  பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் (23) பெப்ரவரி 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், விண்ணப்பங்களை நிகழ்நிலையில் மாத்திரமே விண்ணப்பிக்க  முடியும் என பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், சகல பாடசாலை விண்ணப்பதாரிகளும் பாடசாலை அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையிலும் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய நிகழ்நிலையில்...
- Advertisement -

Latest News

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன!

இலங்கையின் வைத்தியத்துறை வரலாற்றில் ஒட்டிப்பிறந்த 5 வயது இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை பாராட்டுக்களை பெற்றுவரும் அதேவேளை, நாட்டின் அரச சுகாதார துறையின் திறன்கள்...