Tuesday, July 14, 2026
No menu items!

News

கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட குடும்பஸ்தர்  உயிரிழப்பு- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த நபர் ஒருபவர்  நேற்று முன்தினம்(16) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். இவர் கார்த்திகை கிழங்கை உட்கொண்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48)  என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில் , சுகவீனம் அடைந்துள்ளார். அதனை அடுத்து,...

இன்றும் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். தீவின் பிற பகுதிகளில் மதியம் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...

புதிய இராணுவ பிரதம அதிகாரி நியமனம்

இலங்கை இராணுவத்தின் 61ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் W.H.K.S. பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கஜபா படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் W.H.K.S. பீரிஸ் இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை பொறுப்பேற்பதற்கு முன்பு அவர், மேற்கு பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹொட்டன் சமவெளியை பார்வையிட்ட ஜனாதிபதி

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஹொட்டன் சமவெளியை நேரில் சென்று நேற்று பார்வையிட்ட ஜனாதிபதி அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இவ்வாறு கூறினார். ஹொட்டன் சமவெளி தேசிய பூங்கா உட்பட அதனை அண்மித்த பகுதிகளை உயர்மட்ட சுற்றுலா வலயமாக அபிவிருத்தி...

 பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

பொலிஸ் உத்தியோகஸ்தர் எனகூறி சாதாரண உடையில் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரும் இரகசிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களை போன்று விசேட பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் , சிவில் உடையணிந்து கடமைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாள் அவ்வாறு வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ...

ஆசிய கிண்ண இறுதிப் போட்டி நாளை!

துபாயில் நடைபெறும் 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான ஒருநாள் ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி நாளைய தினம் பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டியதனால் இவ்விறு அணிகளும் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணி நடப்புச் செம்பியனான இந்திய அணியை 4...

கனடாவில் குறைந்த விலையில் காணிகள்;

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு பகுதி காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் , புதிதாக வீடுகளை நிர்மானிக்கப்படவுள்ளதாகவும் , கனேடிய அரசாங்கம் திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளது. இந்நிலையில், பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படக்கூடியகாணிகளே இவ்வாறு சிறு தொகையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் ,எதிர்வரும் 2024ஆம் ஆண்டில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் கோச்ரானின் மேயர் பீட்டர்...

நாட்டில் தொடரும் கன மழை..!

தீவின் பெரும்பாலான மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் காலையிலும் பல தடவைகள்...

இமாலய உடன்படிக்கைக்கும் தமிழரசுக்கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை..!

இமாலய உடன்படிக்கைக்கும்  ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது  தமக்கும் இடையிலோ எவ்வித தொடர்புமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று முன்தினம் (13) ஊடகசந்திப்பில்  தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், உலகத்தமிழர் பேரவையும், புத்த பிக்குகளும் இணைந்து நடத்திய பேச்சுவார்ததைகளின் நீட்சியாக, அதனை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டதொரு செயற்திட்டமே இந்த உடன்படிக்கையாகும் என தெரிவித்தார். இவ் உடன்படிக்கையினை...

இலங்கை வரலாற்றில் இவ் வருடம் அதிக யானைகளின் இறப்பு பதிவாகியுள்ளது;

இலங்கை வரலாற்றில் இந்த வருடத்தில் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பொலனறுவை வனவிலங்கு வலயத்தில் 96 யானைகளும், கிழக்கு வனவிலங்கு வலயத்தில் 86 யானைகளும், அநுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 82 யானைகளும் உயிரிழந்துள்ளன. கடந்த 2022ம் ஆண்டு 439 யானைகள் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி...
- Advertisement -

Latest News

ஈரான் மீதான தாக்குதல் வெற்றிகரமாக நிறைவு;  அமெரிக்க இராணுவம் 

ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது நாளாக நடத்தப்பட்ட தாக்குதல் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. புஷெஹர், சபஹார், ஜாஸ்க், கொனாரக், அபு மூசா மற்றும்...