Thursday, May 28, 2026
No menu items!

News

சீனாவை உலுக்கிய பூகம்பம்

சீனாவில் நேற்று இரவு 6.2-ரிக்ட்டர் அளவில் பூகம்பம் பதிவாகியுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் கன்சு மாகாணத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 100 இற்க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 200 இற்க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். வீடுகள் முற்றாக தரைமட்டமாகியுள்ளதால்  மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளிற்கு ஒடி அங்கே தஞ்சமடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சில கிராமங்களிற்கான மின்விநியோகமும் நீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

75 mmக்கு மேல் இன்றும் சில இடங்களில் மழை 

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். தீவின் பிற பகுதிகளில் மதியம் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்...

வெள்ளத்தில் மூழ்கும் முல்லைத்தீவு

நாடு முழுவதும் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிகளவான பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 1126 குடும்பங்களைச் சேர்ந்த 3463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக முத்து ஐயன்கட்டுக்குளத்தின் 4 வான் கதவுகள் 2 அடி 9 அங்குலத்திற்கு...

நிதி உதவியை தடை செய்த  ஹங்கேரி

உக்ரைனுக்கு வழங்குவதாக உறுதி அளித்திருந்த 50 பில்லியன் யூரோ தொகை தொடர்பில் 26 நாடுகள் ஒப்புக்கொண்ட பின்னர் ஹங்கேரி பிரதமரால் அதை முறியடிக்க முடியாது என்று நேற்று முன்தினம்(16) உதவிப் பேச்சுவார்த்தையில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த உதவிப் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை...

வாகனம் வைத்திருப்போருக்கு  கடுமையான நடவடிக்கை

வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பான, தகவல்களை  திரட்டவும்,  பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் 23 இலட்சம் வாகனங்களை தடை செய்யவும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவிதுள்ளார். 05 வருடங்களுக்கு அதிக காலம் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் தொடர்பில் அனைத்து மாகாண சபைகளிடமிருந்தும் தகவல்களை கோரியுள்ளதாக...

பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா

கடந்த வியாழக்கிழமை ஒப்டஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. நேற்று தினம் நான்காம் நாள் ஆட்டத்தின் போது அவுஸ்திரேலிய அணி 360 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா முதலில்...

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

யாழ்ப்பாணம்-நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா  இன்றைய தினம் (18) திங்கட்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை  காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 28ஆம் திகதி  வியாழக்கிழமை  தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

இலங்கைக்கு பெருமை சேர்த்த கில்மிஷா

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்று வந்த இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டி நேற்றைய தினம் (17.12.2023) சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. 6 போட்டியாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிச் சுற்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி. கில்மிஷா வெற்றிவாகை சூடியுள்ளார். குறித்த இசை நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து அசானி மற்றும் கில்மிஷா ஆகிய...

செம்பியனானது பங்களாதேஷ்

துபாயில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியகிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நேற்றைய தினம்(17) பங்களாதேஷ் அணி மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில் 195 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று செம்பியனானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட...

கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட குடும்பஸ்தர்  உயிரிழப்பு- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த நபர் ஒருபவர்  நேற்று முன்தினம்(16) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். இவர் கார்த்திகை கிழங்கை உட்கொண்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48)  என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில் , சுகவீனம் அடைந்துள்ளார். அதனை அடுத்து,...
- Advertisement -

Latest News

மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு தெற்கில் இன்னல்; சர்வதேச மனித உரிமை அமைப்பு

நாட்டில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்...