Thursday, May 28, 2026
No menu items!

News

இன்றும் பல பகுதிகளில்  மழை

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் . மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ,...

இரண்டாவது தகுதி போட்டி இன்று

நடைபெற்றுவரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது தகுதி போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதலாவது தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று சுரேஷ் ரைனா தலைமையிலான Urbanrisers Hyderabad அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. இதேவேளை இன்றைய தினம் கௌதம் கம்பீர் தலைமையிலான India Capitals அணியும், ஹர்பஜன் சிங் தலைமையிலான Manipal Tigers அணியும் இரண்டாவது தகுதி...

குழந்தைகளை விற்பனை செய்த தாய் கைது..!

பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், 25,000ம் ரூபாவிற்கு தனது இரட்டை குழந்தைகளை  விற்பனை செய்துள்ளார்.  இதன் காரணமாக குழந்தைகளை விற்பனை செய்த தாயும் வாங்கிய இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று (07)  காலை இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு குழந்தையை வாங்கிய பெண்ணொருவர் ராகம பிரதேசத்திலும் , மற்றைய...

ஷஹ்ரான் மற்றும் குழுவினர் ஒத்திகை தாக்குதலை மேற்கொண்டதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஷஹ்ரான் மற்றும் குழுவினர் ஒத்திகை தாக்குதலொன்றை மேற்கொண்டனர் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றிற்கு பதில்அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஏப்ரல் 16 ஆம் திகதி ஷஹ்ரான் குழுவினர் தாழங்குடாவில் ஒத்திகையில் ஈடுபட்டனர். இது குறித்து தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் நிலாந்த...

நயினை நாகபூசணி அம்மன் ஆலய பந்தக்கால் நடுகை விழா

நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலயம்,  யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினா தீவில் அமைந்துள்ளது. அத்துடன் ஈழத்தில்  உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று வியாழக்கிழமை (07) நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டலும் யந்திர பூஜை ஆரம்ப நிகழ்வும் மிகவும் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.        

இஸ்ரேலின் செயற்பாட்டை எச்சரித்த அவுஸ்திரேலியா

காசா மக்களை எதிரியின் கரங்களிற்குள் தள்ளும் விதத்தில் இஸ்ரேல் செயற்படக்கூடாது என அவுஸ்திரேலியா எச்சரித்துள்து. இந்த தகவலை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வெளியிட்டுள்ளார். காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பு என எண்ணி செல்வதற்கான இடங்கள் மிகக்குறைவு என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தினது எதிர்காலமானது நியாயமான நிரந்தர சமாதானத்திலும் இரண்டு தேசங்களின் தீர்விலும் தங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள...

14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

 யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள்  கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , அத்துமீறி நுழைத்து தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ய்துள்ளனர். நேற்றைய தினம் (06)  புதன்கிழமை, கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதன் காரணமாகவே கைதுசெய்யப்பட்டுள்ளனர். பின்னர்,  அவர்களை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர். இவ்வாறு 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது...

வன்முறைகளின் பின்னணியில் இரு குழுக்களே செயற்படுகின்றன

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது பொலிசாரின் கடமை எனவும் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் மேலும் கருத்து...

கடற்படையினரின் இரத்த தான முகாம்

காங்கேசன்துறையில் "உத்தர" கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் நடைபெற்றன. இது இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இன் நிகழ்வானது நடைபெற்றிருந்தது. அதனை தொடர்ந்து, 195 கடற்படையினர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின் போது இரத்த தானம் வழங்கி இருந்தமை குறிப்பிடதக்கது.

மலையக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் நியமனம்

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவினால் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நியமனக் கடித்தத்தில் மலையகத் தமிழர்களை இலங்கைச் சமூகத்தில் முழுமையாக இணைத்துக்கொள்வது குறித்து அறிக்கையிடுவதற்கான பொறுப்பும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர் பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான நலன்புரி விடயங்கள், மகளிர் மேம்பாடு, சிறுவர்  நலத்திட்டங்கள்,தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை   சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட  ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வடிவேல் சுரேஷ் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

Latest News

மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு தெற்கில் இன்னல்; சர்வதேச மனித உரிமை அமைப்பு

நாட்டில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்...