Monday, July 13, 2026
No menu items!

Updates

போதைப்பொருள் வியாபாரி வெட்டிப் படுகொலை..!

கம்பஹா-கந்தானை பிரதேசத்தில் நேற்று(13) பகல் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது வீட்டுக்கு முன்பாக ஹயஸ் வாகனத்தில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறைக் கும்பல், மேற்படி நபர் மீது வாள்வெட்டுத்...

வீதியைக் கடக்க முற்பட்ட பெண் மரணம்..!

லுனுவில, ஜயா மாவத்தையைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவர் வீதியைக் கடக்க முயன்ற போது பஸ் ஒன்றில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாதசாரிகள் குழுவொன்று வீதியைக் கடக்கும்போது, நீர்கொழும்பு பகுதியில் இருந்து சிலாபம் சென்ற பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு மீண்டும் முன்னோக்கிச் செல்ல முற்பட்டபோது, முன்பக்கமாக வீதியைக் கடக்க முற்பட்ட குறித்த பெண் மீது பஸ்...

தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது கிடையாது பொன்சேகா!

தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு வடக்கு, கிழக்கு நிலைவரம் எவ்வாறு உள்ளது, ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன்...

கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிவிப்பு..!

கிராம உத்தியோகத்தர்களுக்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இன்று(13 ), நாளை(14) மற்றும் நாளை மறுதினம்(15) ஆகிய தினங்களில், நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ தலைமையகத்தின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் நேர்முகப் பரீட்சை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், உரிய தகைமைகளைப் பெற்று இதுவரை அழைப்புக் கடிதங்களை பெறாத விண்ணப்பதாரர்கள்...

1400 கிலோ புகையிலைகளை கைப்பற்றிய காவல்துறையினர்..!

தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணியளவில் ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோதே இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான புகையிலைகளை தமிழக காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஒவ்வொன்றும் 35 கிலோ எடை கொண்ட 40 பண்டல்களில் 1400 கிலோ புகையிலைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் புகையிலைகளை ஏற்றி வந்த வாகனம் மற்றும் வாகனத்தில்...

தொண்டையில் மாத்திரை சிக்கி உயிரிழந்த சிறுமி..!

மஹியங்கனையில் மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் நேற்று(12) உயிரிழந்துள்ளார். ஓஷதி சவிந்தயா ராஜபக்ச என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்...

வெடித்து சிதறிய ஜப்பானிய ஏவுகணை..!

ஜப்பானிய தனியார் நிறுவனமொன்றினால் இன்று ஏவப்பட்ட ரொக்கெட் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவைத் தளமாக் கொண்ட ஸ்பேஸ் வன் (Space One) எனும் நிறுவனத்தின் Kairos எனும் ரொக்கெட், வாகாயாமா பிராந்தியத்திலுள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஏவுதளத்திலிருந்து இன்று காலை ஏவப்பட்டது. 18 மீற்றர் நீளம் கொண்ட இந்த ரொக்கெட்டில் ஜப்பானிய அரசின் சிறிய சோதனை...

மும்பை இந்தியன்ஸ்யை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) ஆகிய அணிகள் அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) அணி 07 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers)...

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி..!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள வீடொன்றில் நேற்று (12) காலை வயதான தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட இருவரும் இலங்கை பூர்வீகமாக கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும்  80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் ஆகிய இருவரை விக்டோரியா பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களது மரணத்திற்கான காரணத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணைகளின் முதல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒரே ஏவுகணையில் பல்வேறு வெடிபொருட்களுடன் ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் மேற்கொள்ளப்பட்டது.  இது வெற்றி அடைந்ததாக இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், ‘‘மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ்...
- Advertisement -

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...