Monday, July 13, 2026
No menu items!

Updates

கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு..!

யாழ்ப்பாணத்தில் கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது. ஆனால் குறித்த நபருக்குக் கனடா...

மாணவர்களை இலக்கு வைத்து மதன மோதக  விற்பனை..!

மதுரங்குளி , கணமூலையைச் சேர்ந்த 40 வயதுடைய   போதையை ஏற்படுத்தும் மதன மோதக லேகியத்தை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில், குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடமிருந்து 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 4250 மதன மோதக லேகிய...

பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சு எச்சரிக்கை..!

நாட்டில் உள்ள பாடசாலை நிர்வாகங்களுக்கு கல்வி அமைச்சு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில், வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை திட்டமிடுவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் பின்பற்றாத நிலையில் அதிக...

நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம்..!

சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியினால் எதிர்வரும் 19ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படவில்லை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நிகழ்நிலை காப்புச் சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றிய போது சபாநாயகர் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியதாகவும், அரசியல் அமைப்பிற்கு முரணாக...

வீடொன்றின் கூரை மீது விழுந்த 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி..!

பதுளை - ஹாலிஎல, மெதகம பகுதியில் நேற்றைய தினம்  வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று  வீழ்ந்துள்ளது. இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். மேலும் பனிக்கட்டி விழுந்த இடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வானில்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணைய மோசடிகள்..!

இலங்கையில் இணைய மோசடிச் சம்பவங்கள் அதிகளவு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிறிப்டொ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறித்த  அமைப்பின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியிலாளர் சாருக தமுனுகொல தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 1609 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த...

ஹோட்டலுக்குள் மீட்கப்பட்ட இரு சடலங்கள்..!

அம்பாறை - பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண்ணும் குறித்த  நபரும் நேற்றைய தினம் (12) விடுதியில் தங்கியிருந்த நிலையில்,...

தேரர் ஒருவர் படுகொலை…!

ஜனவரி 23 ஆம் திகதி, கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹட்டன கனராம விகாரையில் பணிபுரிந்த கலப்பலுவ தம்மரதன தேரரை காரில் வந்த குழுவினர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் 32 வயதான நபரை நேற்று (11)  ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கமைய, முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையின் அடிப்படையில் அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து...

வவுனியா பாடசாலையொன்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு…!

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் நேற்றையதினம்(11) குப்பை குழியை துப்பரவு செய்த போது அங்கு வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் மோட்டார் குண்டுகளை மீட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின்...

பால் மா விலை குறைப்பு..!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் கிலோ ஒன்றிற்கு 100 - 150 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 15 ஆம் திகதி முதல் இந்த விலைக்குறைப்பு அமுழுக்கு வருமென அவர் மேலும் தெரிவித்தார்.
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...