ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (04.10) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
இந்தச் சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமானது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு இடம் பெற்று வருகின்றது.








