Saturday, May 30, 2026
No menu items!

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு..!

162,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 28ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள்...

வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பம்; 200 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள்  இறக்குமதி!

இலங்கையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 200 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன் இதுவரையில் 450 மில்லியன் டொலருக்கான கடனுறுதிக் கடிதம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு, வாகன இறக்குமதிக்கு, 1 பில்லியன் டொலரை ஒதுக்குவதாக அரசாங்கம்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி, நேற்று (21) நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையானது, ஓரிரவு கொள்கை விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 7.75% வீதத்தில் பராமரிக்க தீர்மானித்துள்ளது.

இராணுவத்தால் மீட்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம் !

போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்து, பின்னர் இராணுவத்தால் மீட்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி, பத்தரமுல்லையில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் உள்ள காவல்துறைத் தலைவரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. பின்னர்,இந்தப் பொருட்கள் மதிப்பீட்டிற்காக தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையம் வழியாக இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்படும். இந்த பொருட்களை அவற்றின் அடையாளங்கள்...

ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு!

இந்த வருடம் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 1,242 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது, இது கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 8.1 சதவீதம் அதிகரிப்பாகும். இந்த வருட மார்ச் மாதத்தில் இறக்குமதி...

பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டிய இலங்கை மத்திய வங்கி!

இலங்கை மத்திய வங்கி, 2024 ஆம் ஆண்டில் 274.79 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளது. குறித்த ஆண்டில், வட்டி வருமானம், உணரப்படாத மறுமதிப்பீட்டு ஆதாயங்கள் மற்றும் விலை மாற்றங்களிலிருந்து உணரப்பட்ட ஆதாயங்கள் உட்பட வெளிநாட்டு நிதி சொத்துக்களிலிருந்து மத்திய வங்கி 110.55 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விலை மாற்றங்களின் மீதான ஆதாயங்கள் உட்பட...

மத்திய வங்கி 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியீடு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) 2024 ஆம் ஆண்டிற்கான அதன் நிதிநிலை அறிக்கைகள் மற்றும் செயல்பாட்டு அறிக்கையை இப்போது பொதுமக்கள் அணுகலாம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிக்கையை மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக கையளித்தார். பொதுமக்கள் CBSL இன் அறிக்கையை https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/financial-statements-operations வழியாக அணுகலாம் . இலங்கை மத்திய வங்கியின்...

2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகளை ஜனாதிபதியிடம் கையளித்த மத்திய வங்கியின் ஆளுநர்!

இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தார் என ஜனாதிபதி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு..!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க, 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் செயல்பாட்டு அறிக்கையை இன்று (29) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார். அறிக்கையின் பிரதியொன்று ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவிற்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிபிஎஸ்எல் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு..!

145,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 29ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img