அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி!!
வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக், தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!
சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான “குஷ்” ரக போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து நாட்டை வந்தடைந்த இவர்களிடம் இருந்து, சுமார் 4.22 கிலோகிராம் “குஷ்” போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாய்லாந்து – கம்போடியா இடையே சமாதான பேச்சுவார்த்தை!
தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்களுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவின் கோலாலம்பூரில் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பிரதி பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் வெளிவிவகார அமைச்சர்..!!
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 58 ஆவது ஆசிய நாடுகள் சங்க (ASEAN) பிராந்திய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மலேசியா சென்ற வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு பாகிஸ்தானின் பிரதி பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான செனட்டர் மொஹம்மட் இஷாக் தாருடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார். இதன்போது, இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு குறித்து பேசப்பட்டதுடன், உயர் மட்ட
இலங்கை வெளியுறவு அமைச்சர், மலேசியப் பிரதமரை சந்திப்பு: இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்!
மலேசியா சென்றிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று மலேசியப் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மலேசியா சென்றிருந்த போதே இச் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பானது மலேசியப் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்
எரிவாயு குழாய் வெடித்ததில் பாரிய தீ விபத்து..!
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் புத்ரா ஹைட்ஸில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு எரிபொருள் நிலையத்திற்கு அருகில் எரிவாயு குழாய் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்பகுதியிலுள்ளவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மலேசியாவிற்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்திய ஃபிட்ஸ்ஏர்!
இலங்கையின் முதல் தனியார் உரிமையாளருக்குச் சொந்தமான சர்வதேச விமான நிறுவனமான ஃபிட்ஸ்ஏர் (FitsAir), மலேசியாவின் கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 65,000 ரூபா கட்டணத்தில் இந்த விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஃபிட்ஸ்ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூருக்கான விமானங்கள் 2025 ஏப்ரல் 4, அன்று தொடங்குவதுடன், வாராந்திர நான்கு விமானச் சேவைகள் முன்னெடுக்கப்படும். ஃபிட்ஸ்ஏர் கோலாலம்பூருக்கு சென்றுவர டிக்கெட்டுக்கான ஆரம்பகட்டணமாக
ICE போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!
சுமார் 5 கிலோ எடையுள்ள Crystal Methamphetamine (ICE) போதைப்பொருளுடன் தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ. 100 மில்லியன் ஆகும். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 33 வயதான தாய்லாந்து பெண் ஒருவராவார், இவர் இன்று அதிகாலை மலேசியாவில் இருந்து வந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில்
துஸ்பிரயோகத்திற்குள்ளான 402 சிறுவர்கள்: மலேசியாவில் கொடூரம்..!
மலேசியாவின் 20 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உடல்ரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என கருதப்படும் 402 சிறுவர்களையும் பதின்மவயதினரையும் பொலிஸார் மீட்டுள்ளனர். ஒரு வயது முதல் 17 வயதானவர்களை மீட்டுள்ளோம். இவர்கள் பல்வேறுவிதமான துஸ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதன்படி மத ஆசிரியர்கள் உட்பட 171 பேரை கைதுசெய்துள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவர் பராமரிப்பு
மகளிர் ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது..!
மலேசியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2வது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போட்டிகள் 2025 ஜனவரி 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 2ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெற உள்ளது. ஐசிசி நடாத்தும் மகளிருக்கான போட்டித் தொடரொன்றை மலேசியா நடத்துவது இதுவே முதல் முறையாகும். தென் பசுபிக் பெருங்கடலில் இருக்கும்