Monday, July 27, 2026
No menu items!

அநுரகுமார திஸாநாயக்க

எரிபொருளுக்கான வரியில் மாற்றமில்லை!

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பூர் பிரதேசத்தில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வாகன இறக்குமதிக்கான வரி அதிகரிப்பு; வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வருடத்திற்குள் 50 ஆயிரம், வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்...

இறக்குமதி கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கை சுங்கம், இலங்கை துறைமுக அதிகார சபை, கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் துறைமுகம் சார்ந்த சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்தநிலையில், சுங்கத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதி தாமதம் அடைவதன் காரணமாகக் கடந்த இரண்டு...

“தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் – 1ஆம் திகதி ஆரம்பம்..!

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. "தூய்மையான இலங்கை" திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட...

IMF இன் கைப்பாவையாக மாறிய ஜனாதிபதி; சஜித் பிரேமதாச தெரிவிப்பு!

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மேடைக்கு மேடையாக வழங்கிய வாக்குறுதிகளை மீறும் வேளையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மையைப் பெற்றுத் தந்து, மக்களின் கனவுகளை நனவாக்கும் யுகத்தை உருவாக்க வாக்குகளைப் பயன்படுத்துமாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று(06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின்...

நவம்பர் 14 ஆம் திகதி இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம்; ஜனாதிபதி…

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம் செய்வதற்கான பாரிய சிரமதானமாகும். நவம்பர் 14 ஆம் திகதி என்பது இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலநறுவையில் புதன்கிழமை (23.10) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை உன்னிப்பாக அவதானித்து வரும் வெளிநாட்டுத் தூதரகங்கள்…!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிந்தது. அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றுமா, இந்தியாவுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றுமா அல்லது அமெரிக்க சார்பு நிலைப்பாட்டில் இயங்குமா என்பதை இவ்வாறு தூதரகங்கள் அவதானித்து வருகின்றன. ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம்...

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் வாகனங்கள் மாயம்…!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 10 கார்கள் , 02 மோட்டார் சைக்கிள்கள் , 10 கெப் ரக வண்டிகள் , 02 ஜிப் வண்டிகள் லொறியொன்று காணாமல் போயுள்ளதாக இலங்கைத் தேசிய கணக்காய்வு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த வாகனங்களை பயன்படுத்துபவர்கள் தொடர்பில் தகவல்களை ஆராய முடியாமல்...

NPP 6.5 மில்லியன் வாக்குகளை பொதுத் தேர்தலில் பெறும் ; எஸ்.பி.திஸாநாயக்க!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரது அரசாங்கமும் வெற்றியீட்டக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். "ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் அனுரகுமார திஸாநாயக்கவின் நடத்தை மற்றும் அவரது அறிக்கைகளின் அடிப்படையில், மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் பலம் இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாக நான் நம்புகிறேன்," என்று திஸாநாயக்க கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின்...

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் ; எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன்!

ஜனாதிபதி தேர்தலின்போது நான் யாருக்காகவும் யார் சார்பாகவும் எந்த விடயங்களையும் கூறவில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்பதே எனது கருத்தாக இருந்தது என முன்னாள் எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு எனது...
- Advertisement -spot_img

Latest News

தெவிநுவர பெரஹராவில் காவடி நடனத்தை நீக்குமாறு பரிந்துரை

தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரை செய்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
- Advertisement -spot_img