Thursday, July 16, 2026
No menu items!

அமெரிக்கா

அமெரிக்காவில் 8 பேர் பலி..!

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் ஜுலியட் பகுதியில் உள்ள  இரண்டு வீடுகளில் இன்று துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பம் குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் ரோமியோ நான்சி என்ற நபரே துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு...

அமெரிக்க பனிப் புயலில் 90 இற்கு மேற்பட்டோர் பலி

அமெரிக்காவில் கடந்த வாரம் முழுதும் வீசிய பனிப் புயலில் 90க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டென்னசீ, ஒரேகன் உள்ளிட்ட மாநிலங்களிலே இவ்  மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் கடுமையான பனிப்புயல் காரணமாக குறித்த மாநிலங்களில் நெருக்கடிநிலை இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருவதுடன் இந்த வாரமும் பனிப்புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்  டென்னசீயில் குழாய்கள் உடைந்துள்ளமையால் சுமார்...

கிரேக்க கப்பலை தாக்கிய ஹௌத்தி

கிரேக்கத்துக்குச் சொந்தமான ஜோக்ராஃபியா (Zografia) என்ற கப்பல் வியட்நாமில் இருந்து இஸ்ரேலுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, செங்கடல் பகுதியில் கடந்த ​​செவ்வாய்கிழமை தாக்கப்பட்டுள்ளது. இக் கப்பலிற்கு சிறிய சேதம் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது ஹௌத்திகளுக்கு ஈரான் வழங்கிய ஆயுதங்களை கைப்பற்றியதாக அமெரிக்க இராணுவம் அறிவித்த நிலையில் இந்த சம்பவம்...

ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தாவிட்டால், அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பலான USS Carney நேற்று (13) காலை யேமனின் ரேடார் கட்டமைப்பை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. அத்துடன் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட கூட்டு இராணுவத்தினர் தற்போது ஹௌதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து 30-க்கும்...

யுக்திய நடவடிக்கையை கண்காணிக்கும் அமெரிக்கா

போதைப் பொருள்  குற்றவாளிகளை கைது செய்யும் யுக்திய திட்டத்தை அமெரிக்காவானது கூர்மையாக  கவனித்துவருகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கின் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் , குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகின்றது. இந்த நடவடிக்கை குறித்து இலங்கை மனித...

அமெரிக்க  பாடசாலையில் துப்பாக்கி சூடு! பலியானோர் தொடர்பில் மர்மம்

அமெரிக்காவின் அயோவாவின் பெரி உயர் தரப்பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்றைய தினம்(04)  இடம்பெற்றுள்ளது என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர் என தெரிவித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர் என்பதை தெரிவிக்காமல் மறைத்துள்ளதாக...

நீதிபதியை தாக்கிய கைதி..!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாண நீதிமன்றத்தில் கைதி ஒருவர் நீதிபதியை பாய்ந்து தாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. இந்த தாக்குதலுக்கு Mary Kay Holthus எனும் 62 வயதான பெண் நீதிபதியே இலக்காகியுள்ளார். நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு பாய்ந்து தாக்கியுள்ளார். கடுமையாக ஒருவரை தாக்கிய குற்றசாட்டில் கைதி மீது வழக்கு...

தடை உத்தரவை இரத்து செய்யும்படி கோரும் ட்ரம்ப்

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட கூடாதென கடந்த மாதம் கொலராடோ உச்ச நீதிமன்றம் தடை உத்தரவை விதித்திருந்தது. இதனை இரத்து செய்யுமாறு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். நீதிமன்றமானது ட்ரம்பை அரசியலமைப்பின் கிளர்ச்சியாளரெனவும் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் இல்லையெனவும் அறிவித்திருந்தது. மேலும் அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது...

டொனால்ட் ட்ரம்பிற்கு தடை..! – நீதிமன்ற உத்தரவு

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு இருப்பதன் காரணமாகவே இந்த தடையை விதித்து கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். இது போன்ற தடை விதிப்புக்காக...

நிதி உதவியை தடை செய்த  ஹங்கேரி

உக்ரைனுக்கு வழங்குவதாக உறுதி அளித்திருந்த 50 பில்லியன் யூரோ தொகை தொடர்பில் 26 நாடுகள் ஒப்புக்கொண்ட பின்னர் ஹங்கேரி பிரதமரால் அதை முறியடிக்க முடியாது என்று நேற்று முன்தினம்(16) உதவிப் பேச்சுவார்த்தையில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த உதவிப் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img