Monday, June 8, 2026
No menu items!

இணையவழி

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள அமேசன் நிறுவனம்!

உலகப் பிரபல இணையவழி வணிக நிறுவனம் அமேசான் தனது வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கம் நடவடிக்கையை அறிவித்துள்ளது. தொழில்நுட்பத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்புகளைச் சந்திக்கும் நிலையில், அமேசன் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (28) முதல் புதிய சுற்று பணிநீக்கம் நடவடிக்கைகளைத் தொடங்கும் என நிறுவனம் திட்டமிட்டுள்ளது. CNBC செய்தியின்படி, இச்சுற்று பணிநீக்கத்தில் சுமார் 30,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவர்....

2025ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை  எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2025 செப்டெம்பர் 18 ஆம் திகதியிலிருந்து 2025 ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை இணையவழி (online) மூலமாக மட்டுமே பெறப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பரீட்சைக்குத் தோற்ற விரும்புவோர், குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2025...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று (11) ஆரம்பமாகியுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்ததாவது, நாடு முழுவதும் 2,787 நிலையங்களில் நடைபெற்ற இந்த பரீட்சையில் 3,79,951 மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் திருத்தும் பணிகள் ஆகஸ்ட் 22 முதல் 27 வரை 43 நிலையங்களில்...

இணைய ஊடுருவல் மூலம் 5 இலட்சம் ரூபா திருடிய பல்கலைகழக மாணவன் கைது!

இணையவழி ஊடாக நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் பல்கலை மாணவன் நேற்று வியாழக்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளார். ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பல்கலைகழக மாணவன் வவுனியா - புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த...

இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்பம்: வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு புதிய வசதி!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இனி தாங்கள் உள்ள இடத்திலிருந்தே, இணையவழி மற்றும் நிகழ்நிலை முறைமை மூலம் கடவுச்சீட்டுகளுக்காக விண்ணப்பிக்கக் கூடிய புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 20 வெளிநாட்டு இலங்கை தூதரகங்கள்/தூதுப்பணிக் குழுக்கள் மூலம் இந்த சேவை அமுல்படுத்தப்படும். அதற்கான உயிர்க்குறி சேகரிப்பு நிலையங்கள், தொழில்நுட்ப வசதிகள், மென்பொருள் அபிவிருத்தி...

தரம் ஆறுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில்..!

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை இன்று (4/9/2025) முதல் ஏப்ரல் 30 திகதி வரை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம். அதிகபட்சமாக 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு...

ஐபோன் 16 ஐ அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம்!

ஆப்பிள் நிறுவனம் நேற்று (19) ஐபோன் 16 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் 16 புதிய திறன்களை உள்ளடக்கியதாக உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது A18 வேகமான செயல்திறன், 48MP 2-in-1 கேமரா அமைப்புடன் அறிமுகமாகியுள்ளது. 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட இந்த தொலைபேசி தற்பொழுது கருப்பு மற்றும் வெள்ளை...

விவசாயிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்..!

வடக்கு மாகாணத்தில் நெல்லை அறுவடை செய்யக்கூடிய விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை கருத்திலெடுத்து அறுவடைசெய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை தொடர்பாக அவசர கலந்துரையாடல் இணையவழியில் புதன்கிழமை (15.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலிருந்து ஆளுநர் மற்றும் பிரதம செயலர் இ.இளங்கோவன் ஆகியோர்...

ஊடக சுதந்திரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்!

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி, பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட பல சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமத்துடன் 24 சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்தக்...

நிதி மோசடி தொடர்பில் 13 வெளிநாட்டுப் பிரஜைகளை CID – இல் முன்னிலையாகுமாறு உத்தரவு..!

இணையவழி மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளில் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாட்டில் தங்கியுள்ள 13 வெளிநாட்டுப் பிரஜைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவர்களுக்குக் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img