Sunday, April 19, 2026
No menu items!

இந்தியப் பெருங்கடல்

இந்தியப் பெருங்கடல் பிராந்திய சவால்களுக்கு– இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராகும் பாகிஸ்தான்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எதிர்கொள்ளும் பலவகையான சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கையுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 'காலி உரையாடல் - 2025' என்ற தலைப்பில் இலங்கையில் நடக்கும் முக்கியமான மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாகிஸ்தான் கடற்படையின் மூத்த பிரதிநிதிகள் குழு, இந்த முடிவை வலியுறுத்தியுள்ளது. இந்தக் குழு பாகிஸ்தான் கடற்படையின் கடலோரப்...

இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கிடையே சந்திப்பு!

8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தை சந்தித்தார். X இல் பதிவிட்ட இந்திய வெளியுறவு அமைச்சர், இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த ஒத்துழைப்பை மதிப்பிட்டதாகக் கூறினார். இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன்  ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்!

ஓமானில் நடைபெற்ற 8ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.    

சுனாமி பேபி 81 எனும் குழந்தை-யார் இந்த ஜெய ராசா அபிலாஷ் ? 

2004 ஆம் ஆண்டு இதே நாளில், சுமத்ரா தீவின் மேற்கே இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ஒரு பேரழிவுகரமான சுனாமியைத் தூண்டியது, இது தாய்லாந்திலிருந்து ஆப்பிரிக்கா வரையிலான கடலோரப் பகுதிகளை மூழ்கடித்து 200,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது. இவ்வாறான நிலையில் இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடம்...

பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்ட புலம்பெயர்ந்தோர்..!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள டியேகோ கார்சியா (Diego Garcia) தீவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நிர்க்கதிக்குள்ளாகியிருந்த புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் உள்ளடங்குவதாகத் தெரியவந்துள்ளது. இதன்படி, குறித்த இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சின் நிதியுதவியுடன் எதிர்வரும் 6 மாதங்கள் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச...

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட படகுகள் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு!

இந்தியப் பெருங்கடல் அருகே, 2 படகுகள் விபத்திற்குள்ளானதில் சோமாலியா நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவைச் சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளைத் தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டுப் பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், சோமாலியாவைச் சேர்ந்த...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img