Wednesday, July 29, 2026
No menu items!

கஞ்சன விஜேசேகர

கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகள் ; விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பட்டியலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியல்...

நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும்; அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

எரிபொருள் விநியோகத்தில் எழுந்த பிரச்சினை அவ்வளவு எளிமையானது அல்ல என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஏனைய நாடுகளில் பின்பற்றப்படுவது போல், எரிபொருள் விலைகள் நாளாந்தம் மாறும் ஒரு முறை இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சிங்கள ஊடகமொன்றில் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து...

பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் மீண்டும் கடமையில்..!

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபையின் 62 பணியாளர்களும் மீண்டும் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர். வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் விசேட பணிப்புரைக்கமைய அவர்கள் மீண்டும் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம், இலங்கை மின்சார சபையைத் தனியார் மயமாக்குவதற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து...

களமிறங்கும் புதிய அரசியல் கூட்டணி – 28 முன்னாள் எம்.பிக்களும் உள்ளடக்கமா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி, கடந்த பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அதன் சில பங்காளி கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (19.12.2024) இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், 28 முன்னாள் நாடாளுமன்ற...

அரச துறையின் சம்பளம் தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்து பொய்யானது; கஞ்சன விஜேசேகர!

அரச துறையின் சம்பளம் தொடர்பான முன்னாள் அரசாங்கத்தின் பிரேரணை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் தெரிவித்த கருத்து பொய்யானது மற்றும் தவறானது என முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அங்கீகரிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் முன்னைய அரசாங்கம்...

எரிபொருளுக்கான வரியை நீக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; விஜேசேகர…!

எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என தற்போதைய அரசாங்கம் தேர்தல் பேரணிகளில் கூறியதை சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் எதிர்வரும் 30 ஆம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும்...

மின் கட்டணம் பாரிய அளவில் குறைக்கப்படும் – அமைச்சர் நம்பிக்கை!

ஜூலை 01 ஆம் திகதி முதல் புதிய மின் கட்டணங்கள் அமுலுக்கு வரலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற இன்றைய (06.06.2024) அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை மின்சார சபை, மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில், முன்மொழிந்துள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிதார். இது...

யூனில் களமிறங்கும் ரணில்…!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க வேண்டுமென அரசாங்கத்தின் அரசியல் தலைவர்கள் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் குழு கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் குழுவில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, டிரான் அலஸ்...

தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, திரன் அலஸ், கஞ்சன விஜேசேகர ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதுடன். எதிர்வரும் தேர்தல்கள்...

மின்சார சபையை ஏமாற்றும் ராஜபக்ச குடும்பம்  

நாடாளுமன்றத்தின் மூலம் மின்சார சபைக்கு 7 கோடி ரூபாவுக்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கயில்  6 மாதங்களுக்கு இந்த கட்டணம் செலுத்த வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் 9 லட்சம் ரூபா மின்சாரக்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img