Thursday, April 30, 2026
No menu items!

கட்டுநாயக்க

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹாஷிஷ் போதைப்பொருள் – கனேடிய மாணவர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருள் கடத்த முயன்ற 21 வயது கனேடிய பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் கனடாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் என்றும், அவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தவர்...

விமான நிலையத்தில் வெளிநாட்டினருக்கு 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது! 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் கடந்த 3 ஆம் திகதி சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்றும் நிறுவப்பட்டது. இதற்கு முன்னர், வெளிநாட்டினர்...

ரூ.400 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் உடன் வந்த பயணி கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார். சந்தேகநபரின் பயணப் பொதிகளை...

கட்டுநாயக்க பகுதியில் பயங்கர விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க மீன் கடை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பில் இருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற லொறியை முந்திச்செல்ல முற்பட்ட போது, எதிர்திசையில் வந்த கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த...

தொழிற்சாலை மூடல் விவகாரம்: இன்று அவசர கலந்துரையாடல் ; அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கி வந்த நெக்ஸ்ட் ஆடைத் தொழிற்சாலை திடீரென மூடப்பட்டதையடுத்து, 1,400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுகுறித்து இன்று (மே 22) தொழிற்சாலை நிர்வாகம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலீட்டு வாரியத்துடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பதில் தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், “நிறுவனத்தின் நான்கு பிரிவுகளில் 2,825 பேர்...

கம்பஹா மாவட்டத்தில் நீர்வெட்டு அமுல்;தேசிய நீர் வழங்கல் சபை !

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட...

பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை நீர்வெட்டு..!

வத்தளை, ஜா - எல  உள்ளிட்ட பல பகுதிகளில் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

எந்தவொரு முன்னறிவிப்பு இன்றி  மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை; வேலையின்றி தவிக்கும் ஊழியர்கள்!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சாலை தற்போது பூட்டப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அங்கு பணிபுரிந்த பணியார்கள், எதிர்கால நடவடிக்கைகள்...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து;  12 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை பயணித்த வேன் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது வேனில் பயணித்த 12 பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வேனில் பயணித்த குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து...

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச்சூடு!

கட்டுநாயக்க,18 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img