Tuesday, June 16, 2026
No menu items!

கரடியனாறு

மட்டக்களப்பில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது!

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையமொன்றுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 6,000 ரூபாயினை கையூட்டலாக பெற்ற போதே அவர் கைதாகியுள்ளார். கைதானவர் 54 வயதுடையவர் என கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   <!-- -->

உணவு ஒவ்வாமை காரணமாக 53 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 53 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரையில் பயிலும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட்ட உணவை உட்கொண்டமையால் மாணவர்களுக்கு நோய் நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 31 மாணவர்களுக்கு நோய்...

மட்டு கரடியனாறு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடியில் இரு தினங்களில் 18 மாடுகள் திருட்டு..!

மட்டக்களப்பு கரடியனாறு, வெல்லாவெளி, களவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிலுள்ள பிரதேசத்தில் கடந்த இரு தினங்களில் மாட்டுப் பட்டியில் இருந்த 7 பசுமாடுகள் 11 எருமை மாடுகள் உட்பட 18 மாடுகள்  திருட்டுப் போயுள்ளதாக இன்று சனிக்கிழமை (12)  அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுப்பட்டியில் வழமைபோல வியாழக்கிழமை இரவு எருமை மாடுகளை...

வாகன விபத்தில் மூவர் படுகாயம்..!

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் ஜீப் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டியிலிருந்து மட்டக்களப்பு பகுதிக்கு விடுமுறைக்காக வந்த  ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. படுகாயமடைந்த  மூவரும் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனம் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட தூரத்திற்கு பாய்ந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்!

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைக்காடு பிரதேசத்திலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காரைக்காடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 20 ஆயிரம் T56 ரக துப்பாக்கி ரவைகள், 300 மிதிவெடிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின்...

கரடியனாறில் விபத்து ; ஒருவர் பலி..!

மோட்டார் சைக்கிள் - வேன் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் செங்கலடி சேனைக்குடியிருப்பை சேர்ந்த 35 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார் . இவர் பெரிய புல்லுமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே பாதை மாறி வந்த வேன் குறித்த நபர் மீது மோதியதில் இந்த...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img