Thursday, April 23, 2026
No menu items!

காங்கேசன்துறை

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை கட்டணம் குறைப்பு..!

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சுபம் நிறுவனத்தின் சார்பில் சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வரும் கப்பல் சேவையில் இரு நாட்டு பயணிகளும் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை கப்பல் நிறுவனத்தில் அதன் தலைவர் சுந்தர்ராஜன் இன்று (01/05/2025)  நாகப்பட்டினம் பத்திரிகையாளர் மன்றத்தில்...

காங்கேசன்துறை கடற்கரையில் கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது!

காங்கேசன்துறை கடற்கரையில் கேரள கஞ்சாவுடன் நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்படைத் தள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இரண்டு  படகுகளை சோதனையிட்டபோது 8 பைகளில் 147 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 322 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர்கள் சாக்கோட்டை மற்றும் அந்தோணிபுரம் பகுதிகளில் வசிப்பவர்கள்...

பல வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை – பலாலி இடையிலான அரச பேருந்து சேவை ஆரம்பம்..!

35 வருடங்களின் பின்னராக காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை மாத்திரமே பயணம் செய்து வந்தனர். கடந்த 10ஆம் திகதி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட...

இன்று முதல் விசேட ரயில் சேவை..!

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களை கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக இன்று (4/18/2025) முதல் பல விசேட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசேட ரயில் சேவைகள் இன்று (4/18/2025), நாளை (4/19/2025), நாளை மறுநாள் (4/20/2025) மற்றும் 21 ஆம் திகதி வரை...

புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு விசேட அறிவிப்பு!

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதற்காக 10 சிறப்பு ரயில்கள் சேவையில் சேர்க்கப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார். அதன்படி, இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு ஒரு சிறப்பு...

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவதுடன், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.  

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களின்  பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை...

காங்கேசன்துறை நாகப்பட்டினத்துக்கு இடையிலான கப்பல் சேவை இடைநிறுத்தம்!

காங்கேசன்துறை நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் தெரவித்துள்ளது. தமிழகத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் மோசமான வானிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக...

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீள ஆரம்பம்!

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img