காங்கேசன்துறை கடற்கரையில் கேரள கஞ்சாவுடன் நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்படைத் தள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இரண்டு  படகுகளை சோதனையிட்டபோது 8 பைகளில் 147 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 322 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் சாக்கோட்டை மற்றும் அந்தோணிபுரம் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் 22, 39 மற்றும் 49 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here