Thursday, July 23, 2026
No menu items!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம்

அரச நிதி மோசடி தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது!

மென்பொருளை நிறுவுவது தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு பிரிவின் கட்டுப்பாட்டாளரை குற்றப் புலனாய்வு பிரிவு (CID) கைது செய்துள்ளது. 'பயனர் முகாமைத்துவ தொகுதி' (User Management Module) என்ற பெயரில் மென்பொருள் தொகுதி ஒன்றுக்காக 9,831,250 ரூபாய் (சுமார் 9.8 மில்லியன்)...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது. அப்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால்...

விமான நிலையங்களில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் முக அங்கீகார கமராக்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது 08 கவுண்டர்களில் மட்டுமே பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திட்டத்தின்...

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு!

கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்வதற்கு வருகைத்தரும் பொதுமக்களுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால்  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவையை 24 மணி நேரமும் மேற்கொள்ளும் பணி 2025.02.18 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, அது 2025.05.30 ஆம் திகதியுடன் முடிவடையும். இதற்கமைய, 2025 ஜூன் மாதம் 02 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள...

கடவுச்சீட்டு வழங்கல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை..!

கடவுச்சீட்டு வழங்கல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு மொத்தம் 186 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்திர் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முன்னர் தினமும் 1,200...

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

காலாவதியான விசாக்களுடன் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (08)  பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 முதல் 54 வயதுக்குட்பட்ட  பங்களாதேஷ் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கம்பஹா...

ஒருநாள் கடவுச்சீட்டு சேவை இடைநிறுத்தம்..!

உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்...

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பணிகள் காரணமாக, மே 5, 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் ஒரே நாள் மற்றும் பொது பாஸ்போர்ட் வழங்கும் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒரு நாள் சேவைக்காக செயல்பட்டு வந்த...

மட்டுப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டு வழங்கும் பணிகள்!

கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான துண்டு சீட்டுகள் வழங்கும் பணிகள், இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, இந்த சேவை குறித்த நாட்களில் நண்பகல் 12 மணி வரை மாத்திரமே முன்னெடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஒரு நாள் சேவையின் கீழ் முன்னெடுக்கப்படும்...

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் நேற்று (10/04/2025) விசேட அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், அந்த நாட்களில் மதியம் 12.00 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபயவின் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், தன்னை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கும் நடவடிக்கைக்கு தடை உத்தரவு...
- Advertisement -spot_img