இதயம் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை அரசாங்கம் 100% அதிகரிப்பதாகவும், விண்ணப்பம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் செலுத்துவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜனாதிபதி நிதியத்தில் இந்த நோயாளிகளுக்காக 50% ஈடுசெய்யப்பட்டதாகவும், ஆனால் இந்த அறுவை சிகிச்சைகளுக்காக ஆகஸ்ட் 2022 க்குள் கிட்டத்தட்ட 8,000 விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, தற்போதைய அரசாங்கத்தின் கீழ், விண்ணப்பம் கிடைத்து ஒரு வாரத்திற்குள் கொடுப்பனவுகள் ஒதுக்கப்படும் வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 116,000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் எதிர்கால சந்ததியினருக்கான இந்த முதலீடு நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதகமான காரணி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஜனாதிபதி நிதியமானது சுகாதார காரணங்களுக்காக, குறிப்பாக இருதய சத்திரசிகிச்சைகளுக்காக உதவி தேவைப்படும் மக்களுக்கு பணத்தை விடுவிக்க நீண்ட காலம் எடுத்தது. இந்த குடிமக்களுக்கு உதவ அதிக நிதி வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here