Saturday, May 9, 2026
No menu items!

கேரள கஞ்சா

வத்தளை பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட 39 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு: 6 பேர் கைது!

வத்தளை, பள்ளியவத்தையில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோகிராம் கேரள கஞ்சாவை வத்தளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் குறிப்பிட்டனர். சோதனை நடத்தப்பட்ட நேரத்தில், விநியோகத்திற்கு தயார் நிலையில் போதைப்பொருட்கள்...

175 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹாஷிஷ் மற்றும் கேரள கஞ்சா பறிமுதல் – பிரதான சந்தேகநபர் கைது!

கொழும்பு - முகத்துவாரம், லெல்லம பகுதியில் 7 கிலோ  ஹாஷிஷுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பாடசாலை மாணவர்களுக்கு விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான...

காங்கேசன்துறை கடற்கரையில் கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது!

காங்கேசன்துறை கடற்கரையில் கேரள கஞ்சாவுடன் நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்படைத் தள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இரண்டு  படகுகளை சோதனையிட்டபோது 8 பைகளில் 147 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 322 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர்கள் சாக்கோட்டை மற்றும் அந்தோணிபுரம் பகுதிகளில் வசிப்பவர்கள்...

தர்மபுரம் பகுதியில் 15 மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா பறிமுதல்!

கிளிநொச்சி, புளியபொக்கனேயில் உள்ள தர்மபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ கேரள கஞ்சாவை கிளிநொச்சி போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி சிறப்பு அதிரடிப் படை மற்றும் கிளிநொச்சி காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது, ​​இந்த போதைப்பொருள் தொகை...

பெருமளவான கேரள கஞ்சா பொதிகளுடன் சிக்கிய மூவர்..!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து மீன்கள் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் கூலர் ரக வாகனத்தில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சாவினை ஏற்றிக் கொண்டிருந்த மூவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று இரவு (31.03.2025) கைது செய்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித...

மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு..!

தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்று (28/03/2025) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா பொதிகளை கடற் படையினர் மீட்டுள்ளனர். சுமார் 124 கிலோ 392 கிராம் ஈரமான எடையுடன் மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னார், மணல் திட்டு 1 மற்றும்...

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

ஒரு கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சா போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய திங்கட்கிழமை (24) மாத்தளை சந்தி குருந்தங்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் கேரள கஞ்சா மற்றும் சந்தேகநபர்...

பொலிஸாரின் அதிரடி – கேரள கஞ்சா மீட்பு..!

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா இன்று (4/3/2025) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதலின்போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 123 கிலோ கேரள...

அதிரடி சோதனை நடவடிக்கை – கேரள கஞ்சாவுடன் சிக்கிய இருவர்..!

யாழ்ப்பாணம் - எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. காரைநகர் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரும் இதன்போது கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. எழுவைதீவு, அனலை...

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

அனலைத்தீவு கடற்பகுதியில் வைத்து 197 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் அனலைத்தீவு கடற்பகுதியில் இன்று (03) அதிகாலை முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கேரளா கஞ்சா தொகையானது 78 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேசாலை மற்றும் காரைநகரைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய சந்தேகநபர்களே...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img