Sunday, May 31, 2026
No menu items!

கையூட்டல்

கையூட்டல் பெற்ற சுகாதார அதிகாரி கைது!

சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம சட்ட அதிகாரி ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC) இன்று (22) கைது செய்துள்ளது. கட்டிட வாடகை ஒப்பந்தம் தொடர்பாக கையூட்டல் கோரியமை மற்றும் பெற்றமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். நபர் ஒருவர் வழங்கிய முறைப்பட்டுக்கமைய ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டு கைது செய்துள்ளது. வாடகை ஒப்பந்தங்கள் எழுதுவதற்காக...

7 அரசியல்வாதிகள் உட்பட 63 பேர் ஊழல் வழக்கில் கைது!

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில், கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்களுக்கான விடை அளிக்கும் நேரத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் அடங்குவதாகப் பிரதமர்...

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தா கைது!

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தா கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் ஜனக சந்திரகுப்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.     <!-- -->

அதிகாரிகள் விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் – ஜனாதிபதி..!

கையூட்டல் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் அதிகாரிகளும் விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற 'தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029' வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி...

கையூட்டல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை!

கையூட்டல் பெறுவது தொடர்பில் தற்போது நிலவும் சட்டத்தைக் கடுமையாக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கையூட்டல் சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபர் குறித்தும் தராதரம் பாராது விசாரணை ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கையூட்டல் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர்-ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது..!

20,000 ரூபாய் பணத்தை கையூட்டல் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் - கிரிபாவ காவல்நிலையத்தில் பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தம்மை விட்டுப் பிரிந்து சென்ற மனைவிக்கு எதிராக கணவர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தி, பின்னர் நீதிமன்றத்தின் ஊடாக நட்டஈடு பெற்று தருவதாக தெரிவித்து குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கையூட்டல் பெற்றுள்ளார். அதேநேரம், குறித்த பணத்தை செலுத்த தவறினால் வழக்கு தாக்கல் செய்து விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img