Wednesday, April 29, 2026
No menu items!

சட்டமூலம்

கனடாவில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

கனடா, தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையாக பில் சி-3 எனும் புதிய சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச செய்திகள் தெரிவிப்பதன்படி, இந்த சட்ட மாற்றத்தால் வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கானவர்கள் பலனடையவுள்ளனர். கனடாவின் குடியேற்ற அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப், நீண்ட காலமாக நிலவி வந்த குடியுரிமை தொடர்பான சிக்கல்களை இந்த சட்டமூலம் சரிசெய்யும் என தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பிறந்தோர்கள்...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் ரத்து : சட்டமூலத்திற்கு தடையில்லை – உயர் நீதிமன்றம்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு விதியும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணானது அல்ல என்றும் நாடாளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றமுடியுமெனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் ஏற்பாடாக இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தனிநபர் சட்டமூலத்தை சமர்ப்பித்தார்; நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்!

1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான தனிநபர் சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்தார். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வழிமொழிந்தார். இந்த தனிநபர் சட்டமூலம் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி வர்த்தமானியினூடாக வெளியிடப்பட்டது. தாமதமான மாகாண...

சாணக்கியன் எம்.பியால் முன்வைக்கப்படவுள்ள சட்டமூலம்..!

மாகாண சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களால் தனி உறுப்பினர் முன்மொழிவாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது உள்ள தடைகளை நீக்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும். அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற...

நிகழ்நிலை காப்பு சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது!

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்பு சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் !

சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிவித்தார். "ஒரு அரசாங்கம் ஊழல்வாதிகளை எவ்வாறு தண்டிக்கும்,...

இன்று கூடவுள்ள பாராளுமன்றம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அறிவிப்பதற்காக நாடாளுமன்ற விசேட அமர்வு இன்று நடைபெறுகிறது. உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் இன்றைய தினம் அறிவிக்கவுள்ளார். பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியின் தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற விசேட அமர்வை இன்று காலை 9.30க்கு கூட்டத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி,...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான மனு மீதான விசாரணை ஆரம்பம்..!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இந்த மனு, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற...

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூல மீளாய்வு அறிக்கை நிதி அமைச்சிடம் கையளிப்பு!

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தமது அறிக்கையை நிதி அமைச்சிடம் கையளித்துள்ளது. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தலுக்காக 2023 ஆம் ஆண்டு இந்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 அடிப்படை உரிமைகளை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது...

தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, உரிய சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி…!

எந்தவொரு முறையிலும் உடல் ரீதியிலான தண்டனையை தடை செய்யும் வகையில், தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, அதற்கு உரிய சட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது. சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும்...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img