Friday, April 17, 2026
No menu items!

சீன அரசாங்கம்

பாடசாலை சீருடைகளை வழங்க ஒப்புக்கொண்ட சீன அரசாங்கம்..!

2026 ஆம் ஆண்டில் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (3/15/2025) நாடாளுமன்றத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சீன ஆய்வு கப்பல்களுக்கு இலங்கையில் அனுமதி..!

இலங்கை வரும் சீன கப்பல்களுக்கு திட்டமிடப்பட்ட பொறிமுறைமையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இந்த வார இறுதியில் சீனாவில் இருந்து மருத்துவ கப்பல் ஒன்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை...

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி சீனத்தூதுவரால் வடக்கு ஆளுநரிடம் கையளிப்பு…

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் புதன்கிழமை  (20.11.2024) கையளித்தார். வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை, வடக்கு மாகாண ஆளுநர்...

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைப் பொருட்களை வழங்கவுள்ள சீன அரசாங்கம்!

2025 ஆம் ஆண்டுக்கான 11.83 மில்லியன் மீற்றர் பாடசாலை சீருடைப் பொருட்களுக்கான முழுத் தேவைக்காக சீன அரசாங்கத்திடமிருந்து மானியத்தை ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சர்கள் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த மானியம் பாடசாலை மற்றும் ஞாயிறு பள்ளி (பிரிவென்) மாணவர்களுக்கான சீருடைப் பொருட்களை உள்ளடக்கும். கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்ட மாதிரியை இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனத்தால்...

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் தயார்!

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். கம்பஹா - கெப்பெட்டிபொல தேசிய பாடசாலையில் இடம்பெற்ற குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத்...

சீனா இலங்கைக்கு மற்றொரு மனிதாபிமான உதவி…!

இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இந்த உதவி வழங்கப்படவுள்ளது. சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை (100,000 அமெரிக்க டொலர்)...

தெற்கு சீனாவில்  கொலை செய்யப்பட்ட ஜப்பானிய மாணவன்…!

தெற்கு சீனாவில் 10 வயது ஜப்பானிய மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அந்நாட்டு ஜப்பானிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் கொலையைச் செய்த 44 வயதுடைய சந்தேக நபர் சீனப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான காரணம் இதுவரையில்...

பள்ளி சீருடைகளை மானியமாக வழங்கும் சீன அரசாங்கம்!

சீன அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டில் இலங்கையில் 4.3 மில்லியன் குழந்தைகளுக்கு பள்ளி சீருடைகளை மானியமாக வழங்கவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் உரிய சீன அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில், 2025 ஆம் ஆண்டிற்கு 4.3 மில்லியன் பாடசாலை...

கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் இன்று (23.07) பிரதேச களஞ்சியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்  என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஆண்டுக்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ஆசிரியர்களின் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் நன்கொடை அரிசி கிளிநொச்சியை வந்தடைந்தது!

இலங்கைக்கு  சீன அரசாங்கம் ஒருதொகை அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்தவகையில் இந்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கனர வாகனமொன்றில் இன்று16.07.2024 கிளிநொச்சி மாவட்டத்தை வந்தடைந்தது. இந்த அரிசி கடற்தொழில் திணைக்களம் ஊடாக 2,978கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. மேலும் எதிர்வரும் நாட்களில் பளை, கண்டாவளை, பூநகரி, நாச்சிக்குடா ஆகிய நான்கு கடற்றொழில் அலுவலகங்கள் ஊடக இந்த அரிசி...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img