Wednesday, July 22, 2026
No menu items!

சுகாதார அமைச்சு

அமுல்படுத்தப்படவுள்ள விசேட தட்டம்மை தடுப்பூசி திட்டம்!

இன்று (04) முதல் நவம்பர் 09 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் விசேட தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கை அம்மை நோயை வெற்றிகரமாக ஒழித்துள்ள போதிலும், கடந்த வருடம் சில பிரதேசங்களில் அம்மை நோயாளர்கள் பதிவாகியிருந்தமையினால்...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்…!

பொதுமக்களிடையே எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. எலிகளின் சிறுநீரால் நீர் மாசுபடுவதுடன், எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் காயங்கள் ஊடாக உடலினுள் செல்லலாம் எனவும், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக, காயங்கள் உள்ள நபர்கள் தண்ணீருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு, சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…!

இந்த வருடத்தில் இதுவரை 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், அதிகளவான நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 17,159 எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 10,150 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமையும்...

கொழும்பு மாவட்டத்தில் அதிக டெங்கு நோயாளர்கள்..!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,494  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 17,159 ஆகும். இந்நிலையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து  10,150 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும்...

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு….!

நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய சிக்கல்கள் இன்றி சிகிச்சைகளை முன்னெடுத்துச்செல்ல முடியும் என அவர் கூறினார். இதனிடையே, மருந்து பற்றாக்குறை தொடர்பில் பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளிடம்...

நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த வைத்திய அதிகாரிகள்!

வைத்தியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும், வைத்தியர்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு, சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டி வைத்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் நேற்று (03) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள், தற்போதைய அரசாங்கம் இதுவரை வைத்தியர்கள் எதிர் நோக்கும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும்...

மருத்துவ உபகரணகள் பற்றாக்குறை: பதுளையில் போராட்டம்..!

பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், பதுளை சிவில் அமைப்புக்கள் இணைந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் பிற மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயளாலர் டொக்டர் பாலித ராஜபக்ஷ கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார் என...

‘பக்கச்சார்பான’ ஒழுக்காற்று விசாரணைக்கு எதிராக GMOA தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளது…

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனது உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஒரு பக்கச்சார்பான மற்றும் நியாயமற்ற ஒழுக்காற்று விசாரணை என்று கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் நாளை(03.09) தொடர் போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையுடன் இணைந்த அதன் உதவிச் செயலாளர் டொக்டர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிராக சுகாதார அமைச்சு ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக...

அதிகரிக்கும் HIV தொற்றாளர்கள்..!

நாட்டில் முதல் காலாண்டில் மாத்திரம் 207 HIV தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர். வருடாந்தம் 700 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்படுகிறார்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 300 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 207 HIV தொற்றாளர்கள்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 34 ஆயிரத்து 906 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 14,248 ஆகும். அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 8,452 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 16 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனால், பொதுமக்கள் அனைவரும்...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img