Thursday, April 30, 2026
No menu items!

திங்கட்கிழமை

மின்கம்பத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து ;ஒருவர் பலி!

வவுனியா - மன்னார் வீதியில் 17ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், 17ஆம் திகதி திங்கட்கிழமை மாலை குறித்த நபரும் மற்றொருவரும் பறயநாலங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது. விபத்தில்...

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி தொடர்பாக வெளிவந்த திடுக்கிடும் தகவல் !

கம்பளை, தவுலகல பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, முதன்மை சந்தேக நபருடன் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகளினால் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், கடத்தப்பட்ட சிறுமியின் தந்தை, தனது மகளுக்கும்...

ரயிலில் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (18) இரவு ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் . கம்பஹா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வழமைக்கு திரும்பும் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள்!

எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதற்கான தீர்மானம் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   <!-- -->

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பான அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் திங்கட்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதும், doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம்...

புதிய ஜனாதிபதியின் வெற்றிக்கொண்டாட்டம் மன்னாரில் !

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று திங்கட்கிழமை  காலை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த நிலையில் மன்னாரில் இன்றைய தினம் திங்கட்கிழமை(23) காலை 11.30 மணியளவில் ஆதரவாளர்களினால் வெற்றிக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பஜார் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் (National...

வெல்லவாய வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீ!

கொஸ்லந்தை, பூனாகலை - வெல்லவாய வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக இந்த வனப்பகுதி ழுழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது. இதனால் வனப்பகுதி அதிகளவில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தீப் பரவல் இன்று திங்கட்கிழமை (26) காலை முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

வீதியால் சென்ற ஒருவர் திடீரென மயங்கி விழுந்து நேற்றுமுன்தினம் (22/07/2024) திங்கட்கிழமை  உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் வீதி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரமசாமி சிவலிங்கம் (56 வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் உரும்பிராயில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளுக்கு காற்று நிரப்புவதற்காக...

நேபாளத்தின் புதிய பிரதமராக கேபி ஷர்மா நியமனம்: புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்!

நேபாளத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கேபி ஷர்மா ஒலி, முந்தைய கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, நேபாளத்தில் கடந்த ஒருவாரகாலமாக நிலவிவந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, ஷர்மா ஒலி இன்று (15) பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஜனாதிபதி அலுவலகம்...

மன்னார் கருங்கண்டல் பாடசாலையின் இலத்திரனியல் வகுப்பறைகளை திறந்து வைத்த சஜித் பிரேமதாச!

எதிர்க்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ அவர்களின் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கருங்கண்டல் பாடசாலைக்கான இலத்திரனியல் மூல வகுப்பறை (SMART CLASS ROOM) கையளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (15) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின்  ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img