Saturday, April 18, 2026
No menu items!

திருகோணமலை

திருகோணமலை போதிராஜ விகாரை – கட்டுமான அகற்றுதல் உத்தரவு தொடர்பான மனு டிசம்பர் 16க்கு ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய உத்தரவை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டிசம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை விகாரையின் விகாராதிபதி, திருகோணமலை கல்யான வம்ச திஸ்ஸ தேரர் தாக்கல் செய்திருந்தார். மனு...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இனவாதமாக மாற்ற வேண்டாம் – நாமல் ராஜபக்ஷ!

திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான பிரச்சினையை இனவாத திசை நோக்கி தள்ளுவதற்கு இடமளிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (17) கருத்து வெளியிட்ட அவர், அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை அமைதியாகத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர்...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசு மீது மிஹிந்தலை பீடாதிபதி கடும் குற்றச்சாட்டு!

திருகோணமலையில் உள்ள போதிராஜ சம்புத்த ஜயந்தி விகாரையில் உருவான பதற்றநிலையை அடுத்து, மிஹிந்தலை இராஜ மகா விகாரையின் தலைமை விகாராதிபதி வளவாஹெங்குணாவெவ தம்மரத்ன தேரர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய நிர்வாகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எச்சரிக்கை அறிகுறிகள் தெளிவாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சமயத் துறவிகள் தாக்கப்பட்டதாகவும், புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவங்களுக்குப் பொறுப்பானது...

திருகோணமலை விவகாரம்-காவல்துறையின் தலையீடு குறித்து சஜித் பிரேமதாச கேள்வி!

திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி பொதிராஜ விஹாரையைச் சுற்றி நேற்று ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக காவல்துறையின் செயல்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இத்தகைய நடவடிக்கைகள் இனவெறி பதற்றங்களை தூண்டும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். அரசியலமைப்பின் 2ஆம் அதிகாரத்தை மேற்கோள் காட்டிய அவர், புத்தமதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் போதிலும் பிற மதங்களுக்கு...

திருகோணமலை  புத்தர் சிலை விவகாரம்– பொது பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!

திருகோணமலை கடற்கரையில் புதிய புத்தர் சிலையை நிறுவியதில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமர்வில் அவர் கூறியதாவது, அந்த சிலையை குறிப்பிட்ட விஹாரையில் வைக்க பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கரையோர பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கடையை தொடர்புடைய முறைப்படி...

திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றநிலை –  பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு !

திருகோணமலையில் நேற்று உருவான பதற்றநிலை தற்போது தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பகுதியின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தும் திருகோணமலை கடற்கரைப் பகுதியில் புதிதாக மதச் சின்னம் ஒன்று நிறுவப்பட்டதை அடுத்து பதற்றமான சூழல் உருவாகி இருந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறை உடனடியாக தலையீடு செய்ததன் மூலம் நிலைமை இயல்பு...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல், வடமத்திய மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை , காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல்...

யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு..!!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி  நபரொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை(30) காலை இடம்பெற்றுள்ளது. தம்பியன் என்றழைக்கப்படும் தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரவு வயலுக்குச் சென்றுவிட்டு காலை வீடு திரும்பும் வேளையில் தோட்டம் ஒன்றிற்குள் மறைந்திருந்த யானை குறித்த நபரை தாக்கியதாக விசாரணைகளில்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img