Sunday, April 19, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!

நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு இன்று முதல் 3 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அதன்படி, முதலாம் இலக்க நாடாளுமன்ற குழு அறையில் முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 4.30வரை இந்த செயலமர்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல,...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட முத்திரைகள் இரத்து!

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் சகல அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால், அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

ஓய்வூதியத்தை இழந்த 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 85 பேருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு இல்லாமல் போயுள்ளது. 1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியக் கொடுப்பனவு சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெற வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினராக 5 வருடங்கள் செயற்பட்டிருக்க வேண்டும். அதேநேரம் 9ஆவது நாடாளுமன்றம்...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் வாக்குமூலம் பதிவு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோருக்கு இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை (03.06.2024) நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது, தனது தந்தையை மஹிந்தானந்த அளுத்கமகே...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img