Saturday, June 13, 2026
No menu items!

பஸ் விபத்து

தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து; 5பேர் உயிரிழப்பு!

தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை அறிவித்துள்ளது. மேலும் குறித்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 411 பகுதியில் இருந்து தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்தில் 40க்கும் அதிகமான பயணிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளாகிய பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து…!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி – பதுளை பிரதான வீதியின் பெலிஹுல் ஓயா பகுதியில் நேற்று (27.09) பிற்பகல் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பக்கவாட்டில் உள்ள அணையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ் சாரதி மற்றும் மூன்று பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img