பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி – பதுளை பிரதான வீதியின் பெலிஹுல் ஓயா பகுதியில் நேற்று (27.09) பிற்பகல் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பக்கவாட்டில் உள்ள அணையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பஸ் சாரதி மற்றும் மூன்று பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.






